November 19, 2021

வாசி யோகம் - பகுதி-10 / vasi yogam part 10

 

vasi yogam sidha vedam part 10

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு பு~;பம் சாத்தியே

சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

- சிவ வாக்கியர்

கடவுள் விளக்கத்தில் சிவானந்த பரமஹம்சரும், சிவ வாக்கியரும், திருமூலரும் ஒத்த கருத்தையே கூறியுள்ளனர். நாத்திகர்கள் - கற்சிலையில் கடவுள் இல்லை. ஆத்திகர்கள் - வழிபடும் கற்சிலையில் கடவுள் உள்ளார். ஞானியர்கள் - நமக்கு உள்ளும் புறமுமாக, பிரபஞ்சத்தின் உள்ளும் புறமுமாக எங்கும் இருக்கும் கடவுள் இந்த கற்சிலையிலும் உள்ளார். இதில் மட்டும்தான் உள்ளார் என்பதும் தவறு. இதில் இல்லை என்பதும் தவறு. 

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்

தௌ;ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே.

- திருமூலர்



வாசி யோகம் - பகுதி 9

 

vasi yogam sidha vedam part 9

அண்டத்தில் உள்ளது. பிண்டத்தில் உள்ளது. மனிதன் ஒரு நடமாடும் பிரபஞ்சம். சிரசே ஆகாயம். மூலாதாரமே பூமி. வாதம் பித்தம் கபமே மற்ற மூன்று பூதங்களாகிய காற்று, வெப்பம், நீர். இவை மூன்றும் ஒன்றிற்குள் ஒன்றாக இருக்கின்றன. ஒன்றிலிருந்து ஒன்றாக உற்பத்தியாகின்றன.  புருவமத்தியில் இருந்து தலைஉச்சியாகிய பிரம்மரந்திரம் வரை உள்ள பகுதி, சிரசே ஆகாயம். அந்த ஆகாயத்தில் புருவமத்தியில் இருக்கும் ஜீவசக்தியாகிய வாயுதான் சூரியன். தீட்சை உபதேசம் என்ற முறையில் அந்த நெற்றிக்கண் திறத்தலே சூரிய உதயம். அது உடலிலும் வாழ்விலும் ஆன்மாவிலும் பிரகாசத்தை உண்டாக்குகிறது. உச்சியில் பிரம்மரந்திரத்தில் அதே சூரியன் சஞ்சரிக்கும் ;போது அங்கு ஜீவசக்தியாகிய வாயுவை கவனிக்கும் போது அதுவே நண்பகல். உடலில் வாழ்வில் ஞனாத்தில் அமைதியின் பிரகாசத்தின் உச்சம். உபதேசம் பெறாதவர்கள், நெற்றிக்கண் திறக்கப்படாதவர்கள் இன்னும் அவர்கள் ஆன்மீக வாழ்வில் இன்னும் சூரிய உதயம் காணாதவர்கள். இருளில் மாயையில் மயக்கத்தில் புலன் மயக்கத்தில் வாழ்பவர்கள். 

ஆக்கினை முதல் துரியம் வரை உள்ள இந்த ஆகாயத்தில் ஜீவன் இருக்கிறது. அந்த ஜீவனின் சலனமே ஜீவசக்தியாகிய வாயு. கடல் வேறு அலை வேறா? இல்லை. கடலின் அசைவே அலை. ஜீவன் வேறு ஜீவசக்தியாகிய வாயு வேறா? இல்லை. ஜீவனின் அசைவே ஜீவசக்தியாகிய வாயு. ஜீவன் ஜீவனாக உள்ளடங்கி அமைதியாக இருந்தால் அதுவே சிவன். சிவனே என்று இருக்கும் நிலை. அதே ஜீவன் ஜீவசக்தியாக மனமாக எண்ணங்களாக வெளியே வியாபித்தால் அதுவே சக்தி நிலை.

இந்த புருவமத்தியில் தான் 3 கோடியே 50 லட்சம் நாடிகளும் வந்து ஒன்று சேர்கின்றன. அந்த நாடிகளின் வீரியமே சுக்கிலம். சுக்கிலம்; இருக்குமிடம் அக்னி நேத்திரம், அதாவது நெருப்புக்கண், நெற்றிக்கண் என்று சொல்லப்படுகின்ற புருவமத்தி. அதனால்தான் உடலுறவில் அல்லது சுயஇன்பத்தில் சுக்கிலமாகிய விந்து  வெளியேறும் போது உடலின் அத்தனை நாடி நரம்புகளில் மின்சாரம் பாய்ந்தது போன்று உச்ச கட்ட இன்பத்தை ஜவன் உணர்கிறது. நாடிகளின் வீரியமே சுக்கிலம். அந்த நாடிகள் தளர்ந்தால் உடலிலே முதுமை. விந்து உற்பத்தியும் உடலில் குறைகிறது. அதிகமான மின்சாரம் வீட்டில் பயன்படுத்தும் வயர்களில் அடிக்கடி பாய்ந்தால் அது கருகி எரிந்து விடும். அதுபோல் அடிக்கடி தாம்பத்தியம் சுயஇன்பத்தில்; ஈடுபட்டால் அடிக்கடி மிகை மின்சாரம் பாய்ந்து நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்துவிடும். உடலில் சுக்கிலம் குறையும் சுருக்கம் ஏற்படும். தளர்ச்சி ஏற்படும். முதுமை வரும். உடலில் தேஜஸ் பொலிவு பிரகாசம்; ;மறைந்துவிடும். நாடி நரம்புகள் முற்றிலும் தளர்ந்தால் அதுவே மரணம். அந்த தளர்வடையும் நரம்புகளை தளர்வடையாமல் வைத்துக்கொள்வதற்கே காயகல்ப கலையில் நரம்பூக்கம் என்னும் பயிற்சி சொல்லித்தருகிறார்கள். 

ஜீவசக்தியாகிய வாயுவின் உற்பத்தி இடமும் புருவமத்தி. சுக்கிலத்தின் இருப்பிடமும் புருவமத்தி. வாயு சுக்கிலம் இரண்டும்; அக்னியின் சொரூபம். அதனால்தான் அடிக்கடி சம்யோகம் சுயஇன்பம் செய்தால் உடல் சூடு அடைகிறது. அதனால்தான். இவைஇரண்டும் இருக்குமிடமாகிய நெற்றிக்கண்ணை நெருப்புக்கண் என்று கூறுகிறோம். இந்த சுக்கிலம் இளகினால்தான் உடலுறவு சாத்தியம். சிரு~;டி சாத்தியம். அது இளகுவது நடமாடிக்கொண்டிருக்கிற,  கதாகதம் செய்துகொண்டிருக்கிற, சக்திவடிவில் ஸ்த்ரீ வடிவில் இருக்கும் ஜீவசக்தியாக இருக்கின்ற வாயு,  புருவமத்தியில் புரு~ வடிவில் சிவநிலையில் இருக்கும் ஜீவநிலையிலிருக்கும்; வாயுவுடன் சம்யோகம் செய்யும் ;போது. அந்த சுக்கிலத்தை இளக்கி ஜீவன் சக்தியோடு சேர்த்து கீழே கொண்டுவந்து சிரு~;டியை உண்டாக்குகிறது ஜீவசக்தியாகிய வாயு. இங்கு சுக்கிலத்திற்குள் வாயு புகுந்து சிரு~;டி உண்டாகிறது என குரு கூறுவதன்; ;பொருள் என்ன? 

முதலில் சிரு~;டிக்கு காரணமான வாயு எங்கே எப்படி உற்பத்தியாகிறது என்றும் பின் சிரு~;டிக்கு பயன்படுத்தப்படும் சுக்கிலம் எங்கே எப்படி உற்பத்தியாகிறது என்பதையும் பின் அவை இரண்டின் மூலமும் சிரு~;டி எப்படி உண்டாகிறது என்றும் குரு சீடனுக்கு விளக்குகிறார். வாயு எங்கே உற்பத்தியாகிறது? புருவமத்தியில். எப்படி உற்பத்தியாகிறது. புருவமத்தியிலிருந்து உச்சந்தலை வரை உள்ள பகுதியே ஆகாயம் அங்குள்ள ஜீவனின் அசைவே வாயு. அது உற்பத்தியாகும் இடம் புருவமத்தி. சுக்கிலம் எங்கே உற்பத்தியாகிறது. புருவமத்தியில். எப்படி உற்பத்தியாகிறது? ஜீவசக்தியாகிய வாயு எப்படி அக்னியின் சொரூபமாக இருக்கிறதென்றும் அதற்குள் எப்படி அக்னி இருக்கிறதென்றும் அந்த வாயு எப்படி தேகமாக இருக்கிறதென்றும் போன பதிவில் பார்த்தோம். வாயுவாக இருப்பது தேகம். தேகமாக இருப்பது வாயு. அந்த தேகத்திற்குள் அக்னி அதிகரிக்கும் போது அதிலிருந்து ஆவியாக உற்பத்தியான வியர்வைதான் சுக்கிலம். இப்படித்தான் சுக்கிலமும் புருவமத்தியில் அத்தனை நாடிகளும் ஒன்று சேரும் புருவமத்தியில் அதன் வீரியமாக உற்பத்தியாகிறது. இவ்வாறு வாயுவின் அக்னியின் வியர்வையிலிருந்து சுக்கிலம் உற்பத்தியாவதால் அதிலிருந்து சிரு~;டி உண்டாவதால் “பிரமாண்ட கடாகமே (உலகம் முழுவதுமுள்ள உயிர்கள்) சுவேத ஜோத்பவம் (வியர்வையிலிருந்து உற்பத்தியானது) என்று முன்னோர்கள் ;கூறினார்கள். இந்த சுக்கிலத்திற்குள் வாயுபுகுந்து எப்படி சிரு~;டி உண்டாகிறது? சிறுவர்கள் முட்டைவிடும் சோப்புதண்ணீரை அல்லது காட்டாமணக்கின் பாலை ஒரு இலையில் எடுத்து ஈர்க்கில் குச்சியை சிறிது வளைத்து ஊது குழல் போல செய்து ஒரு ஊதும் அந்த பாலை தொட்டு ஊதும் போது அங்கே கணக்கில்லாமல் முட்டைகள் உற்பத்தியாகின்றன. அந்த ஒவ்வொரு முட்டையிலும் உறை போல சோப்புநீர் அல்லது காட்டாமணக்கு பால் இருந்தாலும் முட்டைகளுக்கு உள்ளே இருப்பது என்ன? வாயுவாகிய காற்றுதான். இதுதான் சம்யோகம் எனும் புணர்ச்சியின் போதும் நடக்கிறது. சுக்கிலம் காட்டாமணக்கு பால் இரண்டுமே பசைத்தன்மை உள்ளது. மூச்சை அடக்கி அடக்கி சீராக ஊதிதான் சம்யோகமே நடக்கிறது. அவ்வாறு மூச்சுவிட்டு சம்யோகம் நடைபெறும் ;போது பசைத்தன்மை உள்ள சுக்கிலத்திற்குள் வாயுவை செலுத்தும் போது மூத்திரப்பை நுனிவரை முட்டைகள் நீண்டு பின் அதிலிருந்து விடுபட்டு சிறு சிறு முட்டைகளாக ஸ்தீரியின் கற்ப பைக்குள் விழுந்து சிரு~;டி சம்பவிக்கிறது. இப்படி எத்தனை முட்டைகள் கற்பபைக்குள் விழுகிறதோ அத்தனை குழந்தைகள் உண்டாகின்றன. ஒரே பிரசவத்தில் இப்படித்தான் இரண்டு மூன்று குழந்தைகள் கூட உற்பத்தியாகின்றன. வித்தில் வீரியம் இல்லையென்றால் போதுமான பசைத்தன்மை இல்லையென்றால் ஊதுதல் முறையாக இல்லையென்றால் அங்கே ஒரு முட்டைகூட தோன்றுவதில்லை. குழந்தையும் ஜனிப்பதில்லை. அது சில சிறுவர்கள் சோப்புநீரில் முட்டைவிடும்போது ஒரு முட்டைகூட உருவாகாமல் வெடித்து வெடித்து ஏமாற்றம் அடைவது போல. 

சீடனானவன் சுவேதஜம், அண்டஜம், உத்பீஜம், ஜராயுஜம் என்ற நான்கு வகை சிரு~;டிகளை விளக்குமாறு கேட்கிறான். இதை பற்றி உனக்கு ஏற்கனவே என்ன தெரியுமென்று குரு கேட்கிறார். அதற்கு சீடன் சுவேதஜம் என்றால் வியர்வையிலிருந்து மூட்டைப்பூச்சி பேன் முதலியவையும், அண்டஜம் என்றால் முட்டையிலிருந்து பறவை, பாம்பு, மீன் முதலியவையும், உத்பீஜம் என்றால் பூமியிலிருந்து முளைத்து ; புல், பூண்டு தாவரங்கள் முதலியவையும், ஜராயுஜம் என்றால் பிரசவத்தின் மூலம் மனிதன் பசு முதலியவையும் பிறக்கின்றன என அறிந்துள்ளதாக கூறுகிறான். இந்த நான்கு வகைபிறப்புகளும் வேறு வேறு வகையிலான பிறப்புகள் என்று கருதுவதுதான் தவறு என்று குரு விளக்குகிறார். 

எல்லாருக்கும் வாயு இருக்கிறது. அதுதான் தேகம். அந்த வாயுவாகிய தேகம் உ~;ணம் அடையும்போது அதிலிருந்து தோன்றும் வியர்வையே சுக்கிலம். சுவேதம். அதுவே சிரு~;டிக்கு ஆதாராம் என்பதால் தேகத்தின் வியர்வையிலிருந்து சிரு~;டி என்று கூறினார்கள். அது பருஉடலின் வியர்வை என மக்கள் புரிந்துகொண்டதுதான் தவறு. தேகம் என்று பருஉடலை எண்ணிவருவதுதான் அத்தனை தவறான புரிதலுக்கும் காரணம்.

சுக்கிலத்தில் வாயு புகும் போது முட்டை உருவாகிறது. அந்த முட்டையிலிருந்து சிரு~;டி உண்டாவதால் அண்டஜம் என்று கூறினார்கள். குறிப்பிட்ட அளவிற்கு மேல் வளர்ந்தஉடன் முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே உயிர் வருகிறது. அதுதான் முளைப்பு. அது விதையிலிருந்து தாவரம் வெளிவருவதை போல. அதுவே உத்பீஜம் என்று சொல்லப்பட்டது.  அவ்வாறு வெளிவந்தாலும் சிறிது காலம் சில மணிநேரம் பூமி என்னும் கர்ப்ப பைக்குள் இருக்கும் தாவரங்கள் பின்புதான் மண்ணைவிட்டு வெளியே தலையை காண்பிக்கும். இதேதான் பெண்ணிடத்தில் நடக்கும் போது அதை பிரசவித்து பிறத்தல் என்று கூறுகிறோம். இதற்கே ஜராயுஜம் என்று பெயர். இவை நான்கும் நான்கு வகை பிறப்புக்கள் அல்ல. ஒரே பிறப்பின் நான்கு நிலைகள். 

எல்லா உயிர்களுக்குள்ளும் வாயு இருக்கிறது. அதற்குள் அக்னி இருக்கிறது. அதிலிருந்து வியர்வை உண்டாகிறது. அந்த வியர்வையாகிய சுக்கிலத்திலிற்குள் வாயு புகும்போது முட்டை உருவாகிறது. அந்த முட்டைகள் கற்ப பையில் விழுந்தோ அல்லது கோழி பாம்பு முதலிய உயரினங்களில் உடலுக்கு வெளியே தாயின் சூட்டிலோ முளைப்பு என்பது நிகழ்கிறது. வளர்ந்த உயிர் முட்டையிலிருந்தோ தாயின் உடலுக்கு வெளியிலோ வரும்போது அதை பிரசவித்தல் என்று கூறுகிறோம்.

பரு உடலின் வியர்வையிலிருந்து பேன் முட்டை பூச்சி என்றால் எல்லார் உடலிலும் வியர்வை இருக்கிறது. ஏன் பேன் முட்டைபூச்சி எல்லார் உடலிலும் ;இல்லை. 

பொருத்தமான உதாரணங்கள்: பன்னீர் செம்பிலிருந்து தெளிக்கும்போது பன்னீர் சிறு சிறு முட்டைகளாக சிதறுவதைபோல சுக்கில துளிகள் சிதறி அவை எல்லாவற்றிலும் வாயு நுழைந்து விட்டுப்போகாமல் தென்னம்பூ குலைபோல கர்ப்பபையில் விழுகிறது என உதாரணத்துடன் குரு விளக்குகிறார். 

வாயுவாகிய காற்றிற்கு உருவமில்லை. உருவமில்லாத ஒருவருக்கு பெயர் ஏது? ஈஸ்வரனுக்கும் உருவமில்லை. நாமமும் இல்லை. வாயுவும் உள்ளும் புறமுமாக எங்கும் இருக்கிறது. ஈஸ்வரனும் எங்கும்; இருக்கிறார். நமக்கு முன்னே இருக்கும் காற்றிற்கு அடி எது முடி எது என்று காண இயலுமா? முடியாது. பிரபஞ்சத்திற்கு உள்ளும் அப்பாலும் எங்கும் நிறைந்த ஏகப்பெருவெளியாக வெட்டவெளியாக எல்லையே இல்லாமல் உள்ள ஈஸ்வருக்கும் அடி முடிகாண இயலாது. வாயுதான் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்கிறது. இதைத்தான் ஈஸ்வரன் படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களை செய்கிறார் என்று கூறுகிறோம். 

உள்ளும் வெளியும் தான் என்ற நிலையலிருந்து உண்டானது. ஜீவசக்தியாகிய வாயு உள்ளும் வெளியுமாக வியாபிக்கும் போது மனம் உண்டாகி தான் என்ற எண்ணம் உண்டாகி தனக்குள் தனக்கு வெளியே என்றெல்லாம் ;உண்டாயிற்று. ஆனால் அது மனமாக இருக்கும் போது தோன்றுவது. ஆனால் அதே ஜீவசக்தி சிவநிலையில் இருக்கும்போது வெட்டவெளியாக மனமின்றி இருக்கும்போது. அங்கு நான் இல்லை. சிவநிலைமட்டுமே இருக்கிறது. அந்த நிலையில் உள்ளும் வெளியும் இ;ல்லை. பரந்து விரிந்த பரவெளிக்குள் நின்று பாருங்கள். அங்கே உள் ஏது வெளி ஏது? 

எது ஈஸ்வர சேவை? சேவித்தல் என்பது குடித்தல் உட்கொள்ளுதல் என்று பொருள் படும். உள்ளிருக்கும் வாயுவை வெளியே அதோகதியாய் விடாமல் உள்ளே நடக்கவிட்டு ஈஸவரனோடு சேருவதே உட்கொள்ளுதல் சேவித்தல் என்று பொருள்படும். அதுவே ஈஸ்வர சேவை. அதுவன்றி குளித்து கோயிலுக்கு சென்று பால் நெய்வேத்தியங்கள் செய்து பூசை செய்வதல்ல ஈஸ்வர சேவை. அதனால் முக்தி கிட்டாது. வெளியே வியாபித்து நசிந்து அழிந்துபோகும் வாயுவை உட்புறமாக பிரமரந்திரத்தில் துரியத்தில் லயமாக செய்வதே ஈஸ்வர சேவை. அதன் உயர்நிலையே முழுமை நிலையே முக்தி. 

For Video/ Audio:



வாசியோகம் (பகுதி-8) அத்தியாயம் -4

 

Sidha Vedam Vasi yogam part - 8

ஜீவ சக்தியாகிய வாயுதான் ஈஸ்வரன். எப்படி? - ஈஸ் ூ வரன் - பரண சிரே~;டன் - காப்பாற்றும் செயலை செய்வதற்கு உரிமை உடையவன் - ஏன் மாப்பிள்ளை பார்த்தல் வரன் பார்த்தல் என்கிறோம்? ஏன் கணவனே கண்கண்ட தெய்வம் என்கிறோம்? நம்மை காப்பாற்றுவது வாயு அப்படியானால் ஜீவ சக்தியாகிய வாயுதான் ஈஸ்வரன்.

படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலை செய்யும் ஈஸ்வரனும்  ஜீவசக்தியாகிய வாயுவும் ஒன்றே! சிரு~;டி, ஸ்திதி, சம்ஹாரம் மூன்றிற்கும் காரணம் வாயுவாகிய ஈஸ்வரனே! உருவமில்லாத வாயுதான் உருவமுள்ள உடல்  அவதரிக்க காரணமாகிறது. சிரு~;டிக்கு காரணம் வாயுவே! புணர்ச்சி இன்றி சந்தானம் ;இல்லை. வாயு ;இல்லா உடலாகிய பிணம் புணர்ச்சி செய்யுமா? சிரு~;டிக்கு புணர்ச்சி தேவை. புணர்ச்சிக்கு வாயு உள்ள உடல் தேவை. ஆக சிரு~;டிக்கு காரணம் வாயுவே! 

உடம்பில் இருக்கும் நாடிகள் 3 கோடியே 50 இலட்சம். அதில் 72000 மிக முக்கியமானவை – இவை காற்று சஞ்சரிப்பதற்கு பொருத்தமான நாடிகள். - இந்த 72000-ல் 1702 மட்டுமே ஸ்தூல நாடிகள் மற்றவை சூட்சம நாடிகள் - இந்த 1702-ல் தச நாடி என்று சொல்லப்படுகிற 10 நாடிகளே மிக முக்கியமானவை. அவற்றிலும் மிக முக்கியமானவை இடகலை, பிங்கலை மற்றும் சுழிமுனை. அதாவது வாத பித்த கபநாடி. அதிலும் முக்கியமானது சுழிமுனை நாடி. சுழிமுனை என்பது புருவமத்தி. மூலாதாரத்தில் தொடங்கி சுழிமுனையில் வந்து அனைத்து நாடிகளும் சங்கமிக்கும். அந்த நாடிகளில் முக்கியமானது சுழிமுனை நாடி.

உடலின் அனைத்து நாடிகளும் ஒன்று சேரும் இடம், சுக்கிலம் உற்பத்தியாகும் இடம்,  புருவமத்தி. உடலில் மேலும் கீழும் கதாகதம் செய்து கொண்டிருக்கும் ஜீவசக்தியாகிய வாயு ஸ்த்ரீ வடிவம். புருவ மத்தியில் இருக்கும் ஜீவசக்தியாகிய வாயு புரு~ வடிவம். புணர்ச்சியின் போது இவை இரண்டும் புருவமத்தியில் சங்கமித்து சுக்கிலம் கீழ் நோக்கி விரைந்து அதில் வாயு புகுந்து சிரு~;டி உண்டாகிறது. – 

கங்கு மட்டுமே இருப்பது சாதாரண மனிதர்களின் உடல். வாயுவைக் கொண்டு ஊதுதல் என்பதை செய்வதால் அக்னி இருப்பது வாசியோகம் செய்பவரின் உடல். நெருப்பை உருவாக்குதல், காத்தல், அழித்தல் அனைத்தும் வாயுவினால்.

நம் உடலை முதுமை வராமல் அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்றால் உண்மையில் உடல் எதுவென்று தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய சரீரம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது உண்மையில் உங்கள் உடல் இல்லை. உள்ளிருக்கும் காற்றுதான் சரீரம். எப்பொழுது இந்த உடலை சரீரமென்றும் பிணமென்றும் அழைக்கிறோம். ஜீவசக்தியாகிய வாயு, அது இருந்தால் சரீரம் என்றும், இல்லையானால் பிணம் என்றும் அழைக்கிறோம். சரீரம் என்ற வார்த்தை உடலை குறிக்கிறதா? அல்லது உடலில் இருக்கும் வாயுவை குறிக்கிறதா? எது இருந்தால் இந்த உடலை சரீரம் என்று அழைக்கிறோமோ அதுவே சரீரம். வாயுவே சரீரம். காற்றே சரீரம். காற்று இல்லாவிட்டால் உடல் அழிந்து போகின்றது  என்று நினைக்கிறோம். ஆனால் காற்றுதான் உடல் என்பதை நாம் உணர்வதில்லை. னுநயன டிழனல ளை றசழபெ – டிழனல ளை ழெ அழசந”ளை வாந சiபாவ நஒpசநளளழைn. பல்ப் என்று எதை சொல்லுவோம் கரளந போனதையா? அல்லது கரளந போகாத பல்பையா? பேஸ்ட் என்று எதை சொல்லுவோம் காலியான டூத் பேஸட்டையா? அல்லது பசை நிரம்பி உள்ளதையா? புத்தகம் என்று சொல்லுவது அட்டையையா? உள்ளே இருக்கும் வெற்று பேப்பரையா? அல்லது அந்த பேப்பரில் பிரிண்ட் ஆகிஇருக்கும் அர்த்தமுள்ள வார்த்தைகளையா? வாழைப்பழம் என்று சொல்லுவது உள்ளிருக்கும் கனியையா? அல்லது அதன் தோலையா? உள்ளிருக்கும் கனி தீர்ந்து விட்டால் இல்லாவிட்டால் அதற்கு பெயர் தோல். உள்ளிருக்கும் கனியாகிய ஜீவ சக்தியாகிய வாயு இருந்தால் சரீரம் என்றும் அது இல்லாவிட்டால் அதற்கு பிணம் என்று பெயர். அப்படியானால் உள்ளிருக்கும் வாயுதான் சரீரம்.

நாம் காணவும், கேட்கவும், உண்ணவும், எண்ணவும் நடமாடவும் உதவுவது சரீரம். உள்ளே ஜீவசக்தியாகிய வாயு இல்லாவிட்டால் இவைகளை செய்ய முடியுமா? பிணத்தால் இவைகளை செய்ய முடியுமா? அந்த பிணத்திற்கு இவையெல்லாம் முடியாது. அப்படியானால்  சரீரம் என்பது எது? இந்த உடலா? அல்லது உள்ளிருக்கும் ஜீவசக்தியாகிய வாயுவா?

சரீரம் என்ற வார்த்தைக்கு திராவகமாதல் என்று பெயர். அதாவது நீருற்று போல ஊறி ஓடிக் கொண்டிருப்பது. சிறிது சிறிதாக  அழிந்து கொண்டிருப்பது. ஒரு சமயத்தில் முற்றிலும் வற்றி இல்லாமல் போவது. நம் உடலில் சிறிது சிறிதாக நசிந்து போய் அழிவது எது இந்த பருஉடலா? அல்லது வாயு உடலா? வாயு உடல் அதுவே சரீரம். உண்மையில் நசிந்து போகின்றது என்று நாம் நினைக்கின்ற இந்த பருஉடல் நசிவதில்லை. வைரம் பதித்த மரத்துண்டு மண்ணில் புதைத்தால் என்ன ஆகும். மரத்துண்டு கரையானுக்கு புழு பூச்சிகளுக்கு இரையாகி வைரம் மிஞ்சும். அந்த வைரம் தான் நமது எலும்புகள் மண்டையோடு, மரத்துண்டுதான் தோலும் சதையும்- பலநாள் கழித்து தோண்டி பார்த்தாலும் மண்டையோடு எலும்புகள் நசிவதில்லை. மேலும் இறந்து போன மம்மி மியுசியத்தில் இருக்கும் பதப்படுத்தப்படும் உடல், இறந்து போன மீன்களின் பதப்படுத்தப்பட்ட உடல் என்றும் நசிந்து போவதில்லை. உண்மையில் நசிந்து போவது உடலில் இருக்கும் ஜீவசக்தியாகிய வாயுதான். காற்றுதான். அது உடலில் நீருற்று போல ஊறி தொடர்ந்து வெளியே வியாபித்து மனமாக மாறி பஞ்சேந்திரியங்கள் வழியாக வெளியே சென்று நசிந்து நசிந்து ஒருகட்டத்தில் அந்த நீரூற்று எப்படி வற்றி இல்லாமல் போகிறதோ அதேபோல் இல்லாமல் போகிறது. அப்படி நசிந்து இல்லாமல் போவது வாயுதான். அதுவே சரீரம்.

எரியும் வாயு அக்னி சொருபம். சப்த சொரூபம். விளக்கு எரிகிறது என்று கூறுகிறோம். உண்மையில் எரிவது விளக்கா? அதிலிருக்கும் எண்ணையா? திரியா? இது எதுவுமில்லை. காற்றுதான் எரிகிறது. நெருப்பு உண்மையில் எதற்குள் இருக்கிறது? விளக்கிலா? திரியிலா? எண்ணெயிலா? தீக்குச்சியிலா? அல்லது உரச உதவும் தீப்பெட்டியிலா? இவை எதிலும் இல்லை. காற்றில். காற்றின்றி விளக்கு எரிவதில்லை. காற்று அதிகமாக இருந்தாலும் விளக்கு எரிவதில்லை. ஒரு விளக்கை பொருத்தி காற்று போகமுடியாத கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விடுங்கள். அந்த விளக்கு, அந்த பெட்டிக்குள் இருக்கும் காற்று தீர்ந்து எரிந்து போகும் வரைதான் எரியும். பெட்டிக்குள் காற்று தீர்ந்த உடன் விளக்கும் அணைந்துவிடும். எரிவது விளக்கா? காற்றா? காற்றுதான். இந்த உடலும் அப்படி ஒரு விளக்குதான். உள்ளே காற்று தீர்ந்துபோகும்போது எரிவதற்கு ஒன்றும் இன்றி பிணம் என்று ஆகிறது. முதுமை அடைவது அழிந்து போவது இந்த உடல்தான் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் தீர்ந்து போவது அழிந்து போவது உள்ளிருக்கும் காற்றுதான். இதேபோல்தான் விறகுதான் எரிகிறது என்று நினைக்கிறோம். உண்மையில் எரிவது விறகா? காற்றா? காற்று இல்லாவிட்டால் அங்கே ஏதாகிலும் எரிய முடியுமா? எரிவது காற்றுதான்.  எரியும் வாயு அக்னி சொருபம். 

அக்னி சொரூபமும் வாயுதான். சப்த சொரூபமும் வாயுதான். வாயு  இல்லாவிட்டால் சப்தம் உண்டாக முடியுமா? ஜீவசக்தியாகிய வாயுதான் சப்தமாக நசிந்து செலவாகின்றது. வாயு இல்லையெனில் சப்தமில்லை. சப்தமில்லை எனில் மொழி இல்லை. ஆகவே மொழியும் ஜீவசக்தியாகிய வாயுதான். கத்தாதே கத்தாதே என்று ஏன் கூறுகிறார்கள்? அங்கே செலவாவது ஜீவசக்தியாகிய வாயுதான். அது மரணத்திற்கு ஒப்பாகும். எனவேதான் கத்தாதே கத்தாதே என்கிறார்கள். மலையாளத்தில் காளுக என்றால் அழுதல் என்று பொருள். அங்கேயும் இதுதான் நடக்கிறது. ஆக காற்று சப்த சொரூபம்.

ஓம்சாந்தி! சாந்தி! சாந்தி!

For Audio / Video:




September 27, 2021

வாசியோக செய்முறைப் பயிற்சி 1 / Vasi Yogam Practice in Tamil - 1


நமது மூச்சுக்காற்றானாது உள்ளே வெளியே என்று ஓடும் நிலையிலிருந்து அதை உடலின் உட்புறமாக மேல் கீழ் என்று ஓடும் நிலைக்கு அதன் வழக்கமான பாதையிலிருந்து அதை மாற்றி அமைக்க வேண்டும். அதன்பின் அவ்வாறு உட்புறமாக மேலும் கீழும் ஓடும் மூச்சுக் காற்றை தொடர்ந்து கவனிப்பதின் மூலம் அப்படி கவனிக்கும் மனமே அந்த மூச்சுக் காற்றோடு கலந்து மேலும் கீழும் ஓடும் நிலை ஏற்படும். இப்படி பயிற்சி செய்யும் போது மனதில் எண்ணங்கள் ஏற்பட்டால் அது நம்மை மூச்சின் ஓட்டத்தை கவனிக்க விடாமல் அதோடு இணைந்து இருக்க விடாமல் நம்மை எங்கோ எடுத்துச் சென்றுவிடும். மீண்டும் சுயநிலைக்கு வந்து மூச்சைக் கவனிக்க சில  நொடிகளோ நிமிடங்களோ ஆகலாம். அது அவரவர்கள் உலக வாழ்வில்  எவ்வளவு பற்று வைத்துள்ளார்கள் உலக விசயங்களில்  எவ்வளவு தங்களது மனதை சிக்க வைத்துள்ளார்கள் என்பதை பொறுத்தது. ஆனால் விழிப்புணர்வோடு இருப்பேன் மனதின் பின்னால் செல்லாமல் மூச்சை தொடர்ந்து கவனிப்பேன் என்று சில முறை சங்கல்பம் செய்து கொண்டு செய்தால் மனம் வெளியே ஓடினாலும் விரைந்து மீண்டும் மனம் திரும்பி வந்து மூச்சினை தொடர்ந்து கவனிக்க முடியும். இந்த இடத்தில்  மேலும் கீழும் ஓடும் மூச்சுக் காற்றை ஒரு குதிரை போல் பாவித்து கவனிக்கும் மனதை அதன் மேல் ஏறி அதை இறுக பிடித்துக் கொண்டு சவாரி செய்ய வேண்டிய குதிரை ஓட்டியாக காணலாம்.  தொடர்ந்து மூச்சைக் கவனித்து அந்த மூச்சாகவே நாமும் மேலும் கீழும் உட்புறமாக ஓடும் போது சிறிது சிறிதாக குதிரையின் அதாவது ஓடும் மூச்சின் வேகம் குறையும். மூச்சின் வேகம் குறைவதற்கு ஏற்ப அந்த மூச்சாக மாறி தாங்கள் ஓடிக்கொண்டிருக்கும் வேகமும் குறைவதை காணலாம். ஒரு கட்டத்தில் நெஞ்சுக் குழியில் குதிரை  தன் ஓட்டத்தை முற்றிலும் நிறுத்தி நிற்பதை அதாவது மூச்சுவிடுவது முற்றிலும் நின்றுவிடுவதை காணலாம். அப்போது அங்கே ஒரு துடிப்பினை உணர நேரிடும். அந்த துடிப்பை ஆழ்ந்து கவனித்து அந்த துடிப்பாகவே மாறி நீங்கள் துடிக்கும் போது மனமும் இருக்காது. மூச்சும் இருக்காது. இதுவே வாசியோக மோட்ச சூத்திரம் ஒன்று.




August 08, 2021

2. சத்குரு என்பவர் யார்? (Who is Sadhguru?)


 

ஐந்தாவது வேதமாக கருதப்படும் சித்த வேதம் நூல் “சத்குருவே” என்ற வார்த்தையுடன் தொடங்குகிறது. சத்குரு என்ற வார்த்தை தன்னை உணர்ந்த ஞான ஆசிரியரை குறிக்கும். கபீர்தாஸ் தன்னுடைய பாடலில் சத்ய புருசன் என்று அழைக்கப்படும் கடவுளை உணர்ந்தவரே சத்குரு என்று குறிப்பிடுகின்றார். அரூபமான கடவுள் தன்னை உணர்ந்த நிலையில் இருக்கும் ரூப வடிவமே சத்குரு. சத்தியம் சத் என்றால் உண்மை, கடவுள் என்று பொருள்படும். அப்படி பார்த்தால் உண்மையின் வடிவாய் இருப்பவரே சத்குரு. இதற்கு இன்னொரு பொருளும் கொள்ளலாம். சித்த வேதத்தில் சத்து போதல் என்றால் நம்முள் இருக்கும் ஜீவசக்தியாகிய வாயு அதோகதியாய் வெளியே செலவாகி செலவாகி முழுவதும் நசிந்து போதல், இறந்து போதல் என்றும் அதையே மக்கள் செத்துப் போதல் என்று காலப்போக்கில் கூறும் வழக்கம் வந்ததாக குறிப்பிடப்படுகிறது. சத்து என்பது ஜீவசக்தியாகிய வாயு. அதுவே நமது ஜீவன். அது தன்னில் லயமாகிய நிலையே சிவம். பிரம்மம். இவ்வாறு லயமாகி தானாகி தன்மயமாகி பிரம்ம நிலை அடைந்த ஞானியரே சத்குரு என அழைக்கத் தகுந்தவர்கள்.

Who is Sadhguru?

Siddha Vedam also known as Fifth Vedam begins with the word “Sadhguru!” (or Satguru).  The term -Sadhguru refers to an enlightened master who can guide a disciple to attain enlightenment. Kabir Das says in one of his songs: One who has realized God the Sadh Purush is Sadhguru. Sathiyam or sat stands for Truth. Hence Sadhguru is an embodiment of Truth. It is said in Siddha Vedam that we exhaust jeeva sakthi vayu in our day to day life continuously and the result is death which was initially known as ‘sathu podhal’ later on became  “Setthu Podhal”. Hence Sathu is Jeeva Sakthi Vayu that is our Jeevan which is in settled –in-state called “Shivam” and “Brahmam”. The one who has dissolved and become such Brahmam is Sadhguru.



சித்த வேதம் என்னும் நூலை முழுமையாக படித்தால் வாசியோகம் செய்ய முடியுமா?



( சித்த வேதம் கேள்வியும் பதிலும் - கேள்வி எண்.1)

முடியாது. இதில் உள்ள இருபத்தி இரண்டு அத்தியாயங்களை முழுவதும் படித்தாலும் ஒருவரால் வாசியோகம் தனியாக செய்ய இயலாது. ஆனால் உங்கள் ஊரில் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள சித்த வித்தை பயிற்சி நிலையங்களை அணுகி மிக எளிதாக இதை கற்றுக்கொள்ள முடியும். கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால் அங்கு செல்வதற்கு முன்பு சித்த வேதம் என்னும் நூலை நன்கு படித்து புரிந்து கொண்டு பின் செல்லுதல் நல்லது. சில பயிற்சி மையங்களில் குறைந்தது ஐந்து அத்தியாயங்களையாவது சித்த வித்தை பயில வருபவர்கள் புரிந்து கொண்ட பின்புதான் கற்றுக் கொடுக்கிறார்கள். 

1. Can we do vasi yoga just by completely reading Siddha Vedam?

No. You can't start by yourself. Initiation is a must. Contact the nearest Siddha Vidhaya Abhyasam Centre to get initiation. Thereafter, you can practice it regularly at your home. But before approaching the centre, study and understand the book Siddha Vedam at least 5 chapters which are mandatory in some centres. No fee is charged for learning Sidha Vidhai.

For Address, see the video description.



May 26, 2021

 


Youtube Video: வாசி யோகம் தமிழில் பகுதி - 7 Vasi Yogam in Tamil (Part 7)


https://youtu.be/DRA0OJyCB-A


வாசியோகம் (பகுதி – 7) அத்தியாயம் -3 எது பாவம் ? எது புண்ணியம்?

சிவ நிலையே, நம்முள் இருக்கும் ஈஸ்வர சக்தி வெளியே வியாபிக்காத நிலையே, அழியாத நிலையே புண்ணியம். அவ்வாறு இருப்பவரே ஈஸ்வரனுக்கு நிகரான ராஜா. தான்வெளியே வியாபித்து அழியும் நிலை பாவம்.

புண்ணியம் (சுகிர்தம்): யாகம், Nஉறாமம், பூசை, அன்னதானம், கோதானம், 

பாவம் : கெட்ட செயல், உயிர்களை துன்புறுத்துதல், தானம் தர்மம் செய்யாதிருத்தல், இவை போன்றவை. (வேதாத்திரி,- பொய், களவு, மது அருந்துதல், விபச்சாரம், சூதாட்டம்(பஞ்சமா பாவங்கள்) –பைபிள் 10 கட்டளைகள் - பாவம் செய்யாதே. பாவத்தின் சம்பளம் மரணம். The wages of sin is death - The Bible

மூன்று கர்மாக்கள்: சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம், ஆகாமிய கர்மம் மூன்றும் மனமாக ஈஸ்வரசக்தி எனப்படும் ஜீவசக்தி வெளியே வியாபிப்பதால் மட்டுமே உண்டாக முடியும்.

புண்ணியத்தால் உயர்வான மனித பிறப்பும், பாவத்தால் தாழ்வான மற்ற ஜீவிகளாய் பிறக்கிறோம் என்பது தவறு. புண்ணியம் செய்து மனித பிறப்பை பெற்ற நாம் ஏன் பாவம் செய்ய வேண்டும்? உலகில் தற்போது பாவம் செய்யாதவறே இல்லை என்று கூறலாம். பாவிகள் எல்லோரும் விலங்குகளாக பறவைகளாக பிறந்தால், மக்கள் தொகை குறைந்து குறைந்து இல்லாமலே போய்விடுமே. அப்படியானால் மக்கள் தொகை குறைகிறதா? அல்லது கூடுகிறதா? விலங்குகள் மனித பிறவியை அடைய என்ன புண்ணியம் செய்யும்? அப்படி விலங்கு பிறப்பை அடைய என்ன பாவம் செய்தன? ஆதாரம் உண்டா? பதில் இல்லை.


முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்தை இப்பிறவியிலும், இப்பிறவியில் செய்யும் பாவ புண்ணியத்தை அடுத்த பிறவியிலும் அனுபவிப்போம் என்பது உண்மைதானா? முற்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் இந்த பிறவியில் இராஜாவாக, தனவான்களாக, பிராமணர்களாக மற்றும் முற்பிறவியில்பாவம் செய்தவர்கள் இப்பிறவியில் பிச்சைக்காரனாக, வறுமையில் வாடுபவனாக, தீராத நோயளிகளாக பிறந்து தனது  பாவ புண்ணியத்தை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதும் உண்மைதானா? இராஜாவாக, தனவான்களாக, பிராமணர்களாக பிறந்தவர்கள் அந்த பிறவி முழுவதும் அதே நிலையில் இருக்கிறார்களா, அவர்களுக்கு துன்பமோ, நோயோ வந்து க~;டபட்டதில்லையா? அவர்களது நோய்க்கு முற்பிறவியில் செய்த பாவம் தான் காரணம் என்றால் அவர்கள் இராஜாவாக தனவான்களாக (முற்றிலும் பாவம் இல்லாதவர்கள்தான் இந்த உயர்ந்த பிறப்பை அடைய முடியும் - இராஜாக்கள் புண்ணியோத்கிரு~;ட சரீரி - ஈஸ்வராம்சமாகும் இராஜா - இராஜா பிரதியக்Ñ தேவதா – கண் கண்ட தெய்வம்) – அதனால் தான் கோ என்ற சொல் இறைவனையும் குறிக்கும் இராஜாவையும் குறிக்கும் - சிரசில் ஈஸ்வரனோடு லயமாகி நிற்கும் பாவமற்ற சண்டாளனும் இராஜாவே! – 


பாவம் புண்ணியங்கள் மனதிலிருந்தே,  உள்ளிருக்கும் ஈஸ்வர சக்தியாகிய ஜீவ சக்தி வெளியே மனமாக வியாபிக்கும்போதுதான் உண்டாகின்றன. மனமாக வெளியே வியாபிக்கவில்லையென்றால் அங்கே பாவங்கள் செய்ய இடமில்லை. முற்றிலும் பாவமற்ற நிலையே உயர்ந்த புண்ணியமட்டுமே உள்ள நிலை. அதுவே சிவம் சிவமாக சிவனேயென்று இருக்கும் நிலை. அந்த உள்ளடங்கிய ஈஸ்வரனோடு சிரசில் லயமாகிய அந்த நிலையே புண்ணியம். அதுவன்றி வெளியே சக்தியாக மனமாக சென்றால் செலவழிந்த்தால் பாவம்செய்தல் நிலை. ஈஸ்வர சைதன்யம் நசிந்து போகின்ற நிலையே, இல்லாத நிலையே பாவம் - 


புண்ணியம் ஒடுங்கி சந்திர மண்டலத்தில் பனிக்கு சமமாக சென்று பதிகிறது என்று சொல்லக் காரணம் என்ன?  சந்திரன் என்பது இங்கே மனம் -புண்ணியவானை தனவான் என்றும் புரு~hர்த்தம் மிக்கவன் என்றும் கூறக் காரணம் என்ன? - புரு~hர்த்தம் - புரத்தில் சுழிமுனையில் இருக்கும் அர்த்தம் தனம் என்று பொருள் - அனுலோமம் என்றால் ஐPவ சக்தியை வெளியே விடுதல் என்றும் பிரதிலோமம் என்றால் உள்ளே இழுத்தல் என்றும் பொருள் - கமிக்க செய்தல் அனுகமிக்க செய்தல் என்றும் கூறுகிறோம் -

அனுபவம், யுக்தி (அனுபவத்தில் அடைந்த திறன், ஒன்றை செய்வதற்கு சிறந்தது என கண்ட முறைகள்), சுருதி (குரு சீடர் வழியில் காலம்காலமாக செவிவழி கேட்டு மனதில் மட்டும் இருத்தி வைத்து தொடர்ந்து வந்த ஞானம் - வேதங்கள் -  இவற்றை அனுசரித்து எது வருகிறதோ அதைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பல்வேறு பிறப்புக்கள் ஜீவன்கள் உண்மையில் இல்லை. உடலில் மட்டுமே வேறுபாடு. ஜீவன் ஒன்றுதான். (ஜெராக்ஸ்) ஒரு ஜீவன் - சக்தியாக வெளியே வியாபித்தபோது,  அதன் பிரதிபிம்பமாக வெளிப்பட்டதே மற்ற ஜீவன்கள். அதுவே நாம் காணும் இந்த உலகம். எனது ஜீவனே மற்ற உடலில் உள்ள ஜீவனும். நானே மற்ற உடலிலும் ஜீவன்களாக இருக்கிறேன். இதுவே ஞான நிலை.

நாம் செத்துப்போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? ஜீவ சக்தி நசிக்காமல் இருக்க வேண்டும். நம்மை சாகாமல் இரட்சிப்பது எது? உள்ளே இருக்கும் ஜீவசக்தியாகிய வாயு – அதுவே ஈஸ்வரன் -  நம்மை இரட்சிப்பவரே ஈஸ்வரன்

May 21, 2021

Vasi Yogam in Tamil (Part 6) வாசி யோகம் பகுதி - 6




 குருவே துணை.

கடந்த பதிவில் வாசியோகத்தால் வயிற்றில் உண்டாக வேண்டிய அக்னியின் அவசியத்தை எருக்குழியை உதாரணமாக காட்டி  குருஉணர்த்தியதை பார்த்தோம், தற்போது புருவமத்தியில் நெற்றிக்கண்ணில் இருக்கும் அக்னியின் சக்தியை புருவமத்தியின் பெருமையை குரு எவ்வாறு சீடனுக்கு விளக்குகிறார் என பார்ப்போம்.

1. வாசியோகம் தெரிந்த அரிய மரங்கள், செடிகள், விலங்குகள்: தண்ணீர் குடித்தால்  தான் என்னால் உயிர்வாழ முடியும், இல்;லாவிட்டால் நான் சூரிய வெப்பத்தில் கருகி மடிந்து விடுவேன் என வாழும் தாவரங்களைப் போல, உணவு இருந்தால்தான்  என்னால் உயிர் வாழ முடியும், இல்லாவிட்டால் நான் சுருண்டு விழுந்து மடிந்து விடுவேன் என பெரும்பாலான மக்கள் மண் மீது  வாழ்கிறார்கள். ஆனால் தண்ணீர் இல்லாவிட்டாலும் அல்லது எப்பொழுதாவது  தண்ணீர் குறைவவாக கிடைத்தாலும் என்னால் உயிர் வாழ முடியும் சூரிய வெப்பத்தில் கருகி மடிந்து விடமாட்டேன்; என வாழும் சில அரியவகை தாவரங்களைப் போல உணவு இல்லாவிட்டாலும் என்னால் உயிர்வாழ முடியும் என வாசியோகம் செய்து வாழ்ந்து காட்டியவர்கள் சித்தர்கள். 

1.1 String of Pearls – dry environment – minimal water- from South Aftrica

1.2 Succlents – water reservoirs in leaves – scarcely needs water

1.3 Ponytail palm – from Mexico – watered few weeks once- dry soil always

1.4 ZZ plant (Zamioculcas zamifolia– rubbery leaves – indestructible – no  water – thriving on neglect

1.5 Airplants – no soil required – dipping in water 10 days once – can hang and grow in mid air

1.6 Cedar tree– கேதுரு மரம் -இலை உதிராதது-உறுதியானது-என்றும் இளமையானது.pine tree  – தேவதாரு மரம் - மணக்கும் மரம்- பசைத்தன்மை உடையது – எளிதில் தீப்பற்றக் கூடியது – தெய்வீகத்தன்மை உடையது (பைபிள் - உன்னத பாட்டு 1:17, கிறிஸ்துமஸ் மரம், அத்திவரதர் சிலை )

1.7 மனிதன் நீருற்றி வளர்க்கும் மரம் அதிகமா? அல்லது இயற்கையாக வளரும் நீண்ட நாள் வாழும் மரம் அதிகமா? காட்டில் உள்ள மரங்களை வளர்ப்பவன் மனிதனா? மரம் வளர்த்தல் தேவையில்லை. மரத்தை தேவைக்கு அதிகமான தேவையில்லாமல் வெட்டுவதுதான் தேவையில்லை. மனிதன் தான் உணவை தினமும் மூன்று வேளை எதிர்பார்க்கிறான். மரங்களோ எப்போது மழை பெய்கிறதோ அப்போது மட்டும் அதை வாங்கிக் கொண்டு ஒரு சித்தரை போல் வாழ்கிறது.

1.8 ஒட்டகம் - 10 நாட்களுக்கு ஒருமுறை நீர்குடித்து உணவு உண்டு உயிர்வாழும் - 300 – 600 கி. எடை – 600 கி. ஒட்டகம் மூன்று நிமிடத்தில் 200 லி நீரை குடிக்கும் - முதுகில்(humps) நீரை உணவை கொழுப்பாக மாற்றி சேமித்து வைத்துக் கொள்ளும் - scarcely sweat – survive different temperature – camel waste has little water alone –  சுவாசிக்கும் போது வெளிவிடும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை கூட மீண்டும் உறிஞ்சி உடலில் சேமித்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் - புல், தானியங்கள், கோதுமை, ஓட், - உணவு கிடைக்காதபோது எதையும் தின்னும் ,leather , tent, dry leaves, thorny twigs, etc.

1.9 ளஅயடட ளயெமநள நயவ வறiஉந ய றநநம – டிபை ளயெமநளஇ ழnஉந in வறழ றநநமள- ளாயசமள உயn டiஎந றiவாழரவ கழழன 8 றநநமள வழ 3 அழவொள- pநபெரiளெ 2 வழ  4  அழவொள றiவாழரவ கழழன – ழடஅளஇ ய ளயடயஅயனெநச வலிந ரிவழ 10 லநயசள றiவாழரவ கழழன – மண்ணில் குழி தோண்டி வாழும் தவளைகள் டிரசசழறiபெ கசழபள வருடக்கணக்கில் உணவு நீரின்றி வாழும் - முதலைகள் 3 வருடம் வரை உணவு நீரின்றி – சிலந்தி 3 மாதம் முதல் 1 வருடம் வரை – கரடிகள் 100 நாட்கள் வரை – பெரிய கழுகு பருந்து போன்ற பறவைகள் சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை –

1.10 1.9 small snakes eat twice a week – big snakes, once in two weeks- sharks can live without food 8 weeks to 3 months- penguins 2 to  4  months without food – olms, a salamander type upto 10 years without food –burrowing frogs

1.11 கண்டுகொண்ட உண்மைகள்:

தோட்டத்தில் நாம் தண்ணீர் ஊற்றி உரம் போட்டு வளர்க்கும் காய்கறி செடிகளுக்கும் காட்டில் என்றோ ஒரு நாள் பெய்த மழையை கொண்டு யாரும் எந்த உரமும் போடாமல்  செழித்து வளர்ந்து நிற்கும் மரங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? காட்டில் வறண்ட நிலங்களில் உள்ள தாவரங்கள் எல்லாம் தங்களது இலைகள் மற்றும் வேர்களில் நீரை சத்தாக  மாற்றி சேமித்து வைத்துக்கொண்டு பல நாட்களுக்கு மாதங்களுக்கு அதை உணவாக சிறிது சிறிதாக உட்கொள்கின்றன. வுhநசை டநயஎநள யனெ சழழவள யசந சநளநசஎழசைள. சாதார மனிதர்களுக்கும் வாசி யோகம் செய்யும் மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? சாதாரண வாசியோகம் செய்யாத மனிதர்கள் உட்கொள்ளும் உணவு முழுவதுமாக எரிக்கப்படாததால் அங்கே அதற்கு போதுமான வெப்பம் இல்லாததால் 50 சதவீதம் மட்டுமே சத்தாக உறிஞ்சப்பட்டு மீதி 50 சதவீத உணவு கழிவாக வெளியேறுகிறது. ஆனால் வாசியோகம் செய்பவர்களுக்கு வாசியோகத்தால் அவர்களது வயிற்றில் போதுமான நெருப்பு உண்டாகி உண்ணும் உணவானது எருக்குழிக்குள் போடும் போடும் இலைதழைகள் எப்படி முழுவதுமாக மட்கி எருவாக தாவரங்களுக்கு சத்துள்ள உணவாக மாறுகிறதோ அதே போல 98சதவீதம் சத்தாக உறிஞ்சப்பட்டு உடலில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய செல்கள் அந்த சத்தை சேமித்து வைத்து உணவு நீர் எடுத்துக்கொள்ளாதபோதும் அந்த சேமிப்பிலிருந்து எடுத்து சிக்கனமாக பயன்படுத்த தொடங்குகின்றன. அவர்களுக்கு மேலும் காற்றிலிருந்தும் பிரபஞ்சத்திலிருந்தும் கிடைக்கும் சக்தியும் கூடுதலாக பல நாட்கள் பல மாதங்கள் கூட உணவின்றி வாழ உதவுகின்றன.


2. நாம் சாப்பிடும் உணவு எவ்வளவு அதிகமாக சக்தியாக எருவாக மாறும் என்பதை தீர்மானிப்பது எது? வயிற்றில் உண்டாகும் அக்னி. எருக்குழிக்குள் போடப்படும் பொருள்களில் எருவாக மாறாத பொருள் ஏதேனும் உண்டா? இல்லை.வாசி யோகம் வசப்பட்டவர்க்கும் உண்ணும் உணவு மிச்சம் ஏதும் இன்றி முழுவதும் சக்தியாக எருவாக மாறுகிறது. அந்த சக்தியை உடலுக்கு தேவையான அளவுக்கு உடல் அழியாத வண்ணம் தொடர்நது அளிப்பது எது? புருவமத்தியில் இருக்கும் சூரிய சக்தி. 

வயிறு என்னும் எருக்குழியில் எருவாக இருக்கின்ற சக்தியை ஆக்கினையில் பிராண சக்தியாக இருக்கும் சூரியன் உறிஞ்சி உடலுக்கு வழங்குகிறது. இது மரத்தில் ஜீவசக்தியாக இருக்கும் நீரை சூரியன் உறிஞ்சி தாவரத்திற்கு வழங்குவது போல. சூரியனுடைய ஆற்றல் எல்லா செடிகளின் மீதும் ஒரே மாதிரியாகதான் விழுகிறது. ஆனால் சில செடிகள் நீரின்றி காய்ந்து கருகிவிடுவதற்கும் சில மரங்கள் எத்தனை நாட்கள் நீரின்றியும் செழித்து வளர்வதற்கும் காரணம் என்ன? இதுதான் வாசியோகம் செய்யும் மனிதர்களுக்கும் செய்யாதவர்களுக்கும் உள்ள வேறுபாடு.

முதல் வித்தியாசம்: உண்ணும் உணவு முழுவதும் எரிக்கப்பட்டு சக்தியாக மாறுதல். 99சதவீதம் versus 50சதவீதம்

இரண்டாவது வித்தியாசம்: வாசியோகம் செய்பவர்களுடைய செல்கள் மறுசீரமைக்கப்பட்டு சக்தியை சேமித்துவைக்கும் சேமிப்புகிடங்காக மாறுகின்றன. உணவு கிடைக்காத போது சேமிப்பு சிக்கனமாக பயன்படுத்தப்படுகிறது. உணவின் தேவை ஏன் குறைகிறது? மூன்று வேளை இரண்டு வேளையாகி பின் ஒரு வேளையாகி பின் அதுவும் எப்போதாவது என்று மாறி பின் எப்போதும் தேவைப்படாத நிலைக்கு மாறுவது ஏன்?

மூன்றாவது வித்தியாசம்: உணவை விட காற்று நீர் பிரபஞ்ச சக்தியை அதிகமாக வாசியோகம் செய்பவர்கள் உட்கொள்கிறார்கள். ஆகவேதான் அந்த செல்கள் அழியாத நோய்வாய்படாத  செல்களாக மாறுகின்றன. 

நான்காவதுவித்தியாசம்: முதுமை ஏற்படாமல் தடுக்கவும், மரணத்தை தள்ளிப்போடவோ தடுக்கவோ எப்படி முடிகிறது? அழியும் செல்களைவிட உற்பத்தியாகும் செல்கள் அதிகம். இவர்களின் செல்களின் தன்மையே வேறு. இயக்கமே வேறு. சக்தியே வேறு.


3. உடலை இயக்கும் இருதயம் என்பது மார்பில் இ;ல்லை. புருவமத்தியில். பிட்யூட்டரி கிளாண்ட். மாஸ்டர் கிளாண்ட். மற்ற சுரப்பிகளை கட்டுப்படுத்தும் ஒழுங்குபடுத்தும் மாஸ்டர் கிளாண்ட். உடலின் மொத்த இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு முக்கிய பகுதி. கண்ட்ரோல் யூனிட். இருதயம் என்பது மார்பில் இருக்கும் ஒரு உறுப்பின் பெயர் அல்ல. அது உடலை இயக்கும் ஒரு முக்கிய பகுதியின் பெயர். அந்த இடமே புருவமத்தி. அதுவே நமது இருதயம்.

4. உலகில் பிரகாசம் உண்டாவதற்கு மேலே இருக்கின்ற ஆகாயமும் அதில் இருக்கின்ற சூரியனும் என்று சீடன் கூறுகின்றான். ஆனால் குரு கூறுகிறார். நம் உடலில் பிரகாசம் உண்டாவதற்கு காரணம் அதன் மேல் பகுதியில்  இருக்கின்ற ஆகாயம். அதுவே சிரசு. தலை. இந்த ஆகாயத்தில் புருவமத்தியில் இருக்கக்கூடிய  சூரியனே நமது பிரகாசத்திற்கு காரணம். ஆகாயத்திற்கு மூன்று குணங்கள் உண்டு: 1. மேலே இருப்பது, 2. அதிக பிரகாசம் தருவது, 3. காண முடியாதது.

நம் தலைதான் உடலின் மேல்புறத்தில் உள்ள ஆகாயம்.  எந்த கண்ணாடியை பயன்படித்தினாலும் கூட இந்த தலை முழுவதையும் ஒரு போதும் ஒருவராலும் காண முடியாது. இந்த ஆகாயத்தில் இருக்கும் சூரியனே நமது புருவமத்தியில் இருக்கக் கூடிய இந்த சூரியனாகிய பிராண சக்தியே அக்னி சொருபமான இந்த பிராண சக்தியே நமது பிரகாசத்திற்கு காரணம். 

5.  சப்தத்தை உண்டாக்குவது கைகளும் கால்களும் ;அல்ல சிரசே. சப்தம் உண்டாகுவதும் சப்தம் கேட்பதும் ஆகாயத்தினால் தான். நமது உடலில் சப்தத்தை உண்டாக்கும் வாயும் அதை கேட்கும் காதும் இருப்பது ஆகாயம் என்ற சிரசினால்தான். வாய் மட்டுமல்ல கைகளும் கால்களும் உடலும் கூட சப்தத்தை உண்டாக்க முடியும். ஆனால் உண்மையில் இவை சப்தத்தை உண்டாக்குவதில்லை. ஆகாயமே உண்டாக்குகிறது. தலையில்லாத உடலே சாட்சி.

முழு உடலையும் இயக்குவதும் ஆகாயமே. சிரசே. புருவமத்தியில் சூரியசக்தி இயங்கினால் முகத்தில் உடலில் அறிவில் வாழ்வில் பிரகாசம் இருக்கும்.

6. உடலின் பிரகாசத்திற்கு காரணம் சிரசே. உடல் ஒரு இரண்டு அடுக்கு மாடி வீடு. அதில் பிரகாசம் வருவது மேல் அடுக்கில் இருந்து, புருவமத்தியில் இருந்துதான். அதில் பிரகாசத்தை காண வேண்டுமானால் விளக்கும் திரியும், எண்ணெயும், நெருப்பும் இருந்து வீட்டின் கதவுகளும் சன்னல்களும் திறக்கப்பட வேண்டும்.

7. உடலே விளக்கு. மனமே திரி. நிரப்ப வேண்டிய எண்ணெய் - காற்று. அங்கே வெளிச்சத்தை பிரகாசத்தை தரும் நெருப்பே புருவமத்தியில் இருக்கும் சூரியன்.

8. நமது உடலில் இருக்கும் சீவனே சிவன். அவனுக்கு மூன்று கண்கள் இருக்கின்றன. சிவனுக்கு விருபாட்சன் என்றும் திரிலோசனன் என்றும் இரு பெயர்கள் உண்டு. சிவனின் விருபாட்ச வடிவம் தனது மனைவி சதியின் இறப்புக்குபின் கோபத்தில் - கர்நாடகாவில் துங்கபத்திரா நதிக்கரைக்கு அருகில் உள்ள உறாம்பி நகரத்தில் அமைந்துள்ளது விருபாட்ச வடிவத்தில் உள்ள சிவன் கோயில் - வாரணாசிக்கு அருகில் திரிலோச மகாதேவ் கோயில் தான் தோன்றி கடவுளாக நெற்றிக்கண் கொண்ட சிவலிங்கம் - சக்தி சதியாகிய சிவனின் முதல் மனைவி நெருப்புக்குழிக்குள் விழுந்து அழிந்ததால் சிவனின் நெற்றிக்கண் திறந்தது என்பதன் பொருள் என்ன? சக்தியாக இருக்கும் மனம் அழிந்தால்தான் அங்கே சுழுமனை திறக்கும். நெற்றிக்கண் திறக்கும்.

9. சிவனின் மூன்று கண்கள்: இடகலை, பிங்கலை, சுழிமுனை - இடகலை சந்திரனுக்குரிய கண் - பிங்கலை சூரியனுக்குரிய கண் - சுழிமுனை அக்னிக் கண் நெற்றிக்கண், புருவமத்தி – சுழுமுனை இயங்க என்ன செய்ய வேண்டும்? கையை உயர்த்தி காதோடு வைக்கலாமா? இடது புறமாக வலதுபுறமாக ஒரேசமயத்தில் உடலுக்கு அழுத்தம் கொடுக்கலாமா? மனம் அழிந்தால் சுழுமுனை தானாக திறக்கும். அதுதான் விருபாட்ச சிவன் வடிவம். மனைவி இறந்த உடன் அவருக்கு ஏன் நெற்றிக்கண் திறந்தது? சுழுமுனை திறந்தால் மனம் இருக்காது. அதுவே இயல்பான நெற்றிக்கண் திறப்பு. பற்று அழிந்தால் மனம் அழியும். அதற்கே தத்துவ விளக்கம். வாசியோக பயிற்சி சித்தியாக மூச்சு வெளிமுகமாக அல்லாமல் உள்முகமாக மேலும் கீழும் கதாகதம் செய்ய வேண்டுமனால் சக்தியாகிய மனம் வெளியே ஈஸ்வர சக்தியாக வியாபிக்கும் மனம் அழிய வேண்டும்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.


Vasi Yogam in Tamil (Part 5) வாசி யோகம் பகுதி - 5




 குருவே துணை.

வாசியோகத்தால் காயசித்தி அடைய வேண்டுமானால், அதற்கு

நம் உடம்பில் போதுமான அக்கினி உண்டாயிருக்கவில்லை.

நெருப்பின் குணம்:

நெருப்பின் குணம் தன்னில் போடப்படும் பொருளை எரித்துச் சாம்பலாக்குவது. மணமுள்ள பொருள் என்றால் எரித்து அந்த இடத்தையே நறுமணமுள்ளதாக மாற்றுவது. (சாம்பிராணி, பத்தி) மாசு உள்ள பொருளைக் கூட எரித்துத் தூய்மைப்படுத்துவது. பிரகாசமற்ற ஒன்றையும் பிரகாசிக்க செய்வது. (தங்கம்). வெப்பத்தினால்  பொருள்கள் விரிவடையும். கடினமான பொருளையும் உருமாற்றலாம். (இரும்பு, தங்கம், வெள்ளி, பிளாஸ்டிக்). நெருப்பிற்கு நிலையான உருவம் கிடையாது. உரு மாறிக் கொண்டே இருக்கும். நெருப்பு காற்றைக் குடித்தே உயிர் வாழ்கிறது. எங்கே போதுமான அளவு காற்று இல்லையோ அங்கே நெருப்பும் உயிர்வாழ இயலாது. எங்கே இரை இல்லையோ அங்கே நெருப்பு உயிர்வாழ இயலாது. நீரும் காற்றும் அப்படி இல்லை. நெருப்பு உருவாகும் இடம் அழுத்தம் ஏற்படும் இடம்.

நம் உடம்பில் நெருப்பு போதுமான அளவு இல்லை – ஆதாரம்

 1. நெருப்பின் குணம் தன்னில் போடப்படும் பொருளை எரித்துச் சாம்பலாக்குவது. நாம் உண்ணும் உணவு அக்கினியில் பட்டு எரிக்கப்படுகிறது என்றால் ஏன் மலத்தில் சாம்பல் இல்லை? உணவை எரிக்க அங்கே போதுமான அக்னி இல்லையென்றே பொருள். பிறந்த குழந்தை ஞானியர் மலம் எப்படி இருக்கும்? அப்ப அவர்கள் இருவர் உடலில் மட்டும்தான் நெருப்பு உள்ளதா? மற்றவர்  உடம்பில் போதுமான அக்கினி உண்டாகவில்லை.

2. மணமுள்ள பொருள் என்றால் எரித்து அந்த இடத்தையே நறுமணமுள்ளதாக மாற்றுவது நெருப்பின் குணம். அப்படியானால் வாசனையுள்ள பொருளை உண்கிறோம். வயிற்றில் உள்ள நெருப்பு அதை எரித்து சீரணித்தால் ஏன் மலம் நாற்றம் அடிக்கிறது? மலம் வாசனையாக அல்லவா இருக்க வேண்டும். ஏன் நாற்றம் அடிக்க வேண்டும்? உடம்பில் போதுமான அக்கினி இல்லையென்றே பொருள். 

3. நெருப்பில் உயிர்கள் உயிர்வாழ முடியாது. அக்கினியில் எரிக்கப்பட்டு வரும் சீரணிக்கப்பட்டு வரும் மலத்தில் எப்படி புழு பூச்சிகள் காணப்படுகின்றன? சாமான்ய மனிதர்கள் உடம்பில் போதுமான அக்கினி இல்லையென்றே பொருள். 

4. மாசு உள்ள பொருளைக் கூட எரித்துத் தூய்மைப்படுத்துவது நெருப்பு. பிரகாசமற்ற ஒன்றையும் பிரகாசிக்க செய்வது நெருப்பு. பின் ஏன் உடம்பில் உள்ள அக்கினியினால் அந்த உடல் தூய்மையடைவதில்லை. பிரகாசிக்கவில்லை. மாறாக நோய்வாய்படுகிறது. முதுமையடைகிறது. நெருப்பினால் ஒரு பொருள் விரிவடையும். உடம்பில் நெருப்பு இருந்தால் ஏன் உடல் முதுமையடைந்து சுருங்கிப்போகிறது. பிரகாசமற்ற ஒன்றையும் பிரகாசிக்க செய்வது நெருப்பு. உடல் ஏன் முதுமையடைந்து பொலிவிழந்து போகிறது.  விருத்தரும் பாலராவார் மேனியும் சிவந்திடும் அப்படின்னு சித்தர்கள் சொன்னது என்னாச்சு? இங்கே பாலரும் விருத்தரானதுதான் மிச்சம். சாமான்ய மனிதர்கள் உடம்பில் போதுமான அக்கினி இல்லையென்றே பொருள். 

எருக்குழியில் கொட்டப்படும் பொருள்கள் கெட்டுப்போவதுதான் எரு. தாவரத்திற்கு உணவு. வயிறுதான் எருக்குழி.  வயிற்றுக்குள் போடப்படும் உணவு கெட்டுப்போனால்தான் சீரணம் நன்றாக நடந்திருக்கிறது என பொருள். கெட்டுப்போகாமல் உடலுக்கு தேவையான உரமாக மாறாமால் வெளியே அப்படியே வந்தால் அதுவே அசீரணம். சாப்பிடும் உணவு கெட்டுப் போவதற்கே. கெட்டுப்போனால்தான் அது உணவாக எருவாக மாறும். உயிர் வாழத் தேவைப்படும் உணவாக மாறும். உண்ணும் உணவு எருவாக மாறி மீண்டும் உடலுக்கு சத்துள்ள உணவாக மாறுகிறது.

தேவையற்ற காய்கறி கழிவு, தூக்கியெறியப்படும் பழத்தோல், அரிசி களைந்த தண்ணீர் இப்படி உருவாகும் களனித்தண்ணீரை குடித்துவிட்டு மாடு கொழு கொழு என இருக்க காரணம் என்ன? மாட்டின் வயிற்றுக்குள்தான் மிகப்பெரிய எருக்குழி இருக்கிறது. ஜல்லிக்கட்டு என்று சொல்லி அடக்க முடியாத அளவுக்கு மாடு ஏன் சக்திவாய்ந்ததாக மாறுகிறது? 

சுக்கிலமே பிரம்மம். அது எப்படி உருவாகிறது?

வயிறு என்னும் எருக்குழியில் போடப்படும் உணவு நெருக்கத்தினால் அழுத்தமும், அழுத்தத்தினால் சூடும், சூட்டினால் புழுக்கமும், பழுக்கத்தினால் வியர்வையும் உண்டாகிறது. சூடு எங்கே இருக்கிறதோ அங்கே ஆவி உண்டாகும். ஆவிதான்; வியர்வையாக மாறும். அந்த வியர்வையே சுக்கிலம். விந்து. ஆக அக்கினியே சுக்கிலத்தின் மூலம். சுக்கிலமே அக்கினி. குண்டலினி. குண்டம் - நெருப்பு , அலி – ஆணும் பெண்ணுமான தன்மையுள்ள – அர்த்தனாரீஸ்வரர். சுக்கிலமே பிரம்மம். ஏன்? சுக்கிலத்தை கொண்டுதான் சிருÑ;டி. எனவேதான் பிரம்மா. பிரம்மாண்ட கடாகம் சுவேதஜோத்பவம் என்பார்கள். சுவேதம் என்றால் சூட்டினால் ஆவியாகி உண்டான வியர்வை என்று அழைக்கப்படும் சுக்கிலம். நாம் காணும் இந்த பிரம்மாண்ட உலகம் வியர்வையிலிருந்து உண்டானது என சொன்னதன் பொருள் இதுதான். பிரம்மாண்ட கடாகம் சுவேதஜோத்பவம்.

வயிறு என்னும் எருக்குழிக்குள்  உணவிலிருந்து உருவான சாறு, அந்தக் கறை, அதுதான் இரத்தம.; சுரோணிதம் எனப்படுகிறது. அது  வியர்வை என்னும் சுக்கிலத்துடன் அங்கே கலந்து அதற்குள் வாயுபுகுந்து ஜீவிக்கத் தொடங்கும்போதுதான் ஜீவன்கள் உருவாகின்றன. உடலுக்கு உள்ளேNயும் வெளியேயும் புழு பூச்சிகள் ஜீவன்கள் உருவாக இதுவே காரணம். சுக்கிலம் மட்டும் அல்லது இரத்தம் மட்டும் அல்லது காற்று மட்டும் தனித்து இருந்தால் அங்கே உயிர் உருவாவதில்லை. இவை ஒன்றாக சேரும் போதுதான் உயிர் உருவாகிறது. பரமாய சக்தியுள் பஞ்சமா பூதங்கள் தரம்மாற தோன்றும் பிறப்பு என ஒளவையார் கூறுகிறார்.

சூரியனிலிருந்து வரும் சக்தி வெப்பம் ஒளி எல்லா தாவரங்களுக்கும் ஒரே அளவில்தான் கொடுக்கப்படுகிறது. ஆனால் சில தாவரங்கள் மட்டும் வாடி கருவி மடிந்து போவதேன்? சில தாவரங்கள் அந்த சக்தியை உறிந்து வளர்ந்து செழிப்பது ஏன்? நம் உடலுக்குள் இருக்கும் சூரியனே பிராணனன். அக்கினி சொருபமான சூரியனுக்கே பிராணன் என்று பெயர். அது இருக்கும் இடமே நெற்றிக்கண். நெருப்புக் கண். புருவமத்தி. வயிறான எருக்குழிக்குள் போடப்படும் உணவின் சக்தியை உறிந்து உடல் செழித்துவளர உதவுவது இந்த பிராணன். சத்தில்லாத உணவை மலமாக வெளியேற்றுகிறது.

சிரசே ஆகாயம். நெற்றிக்கண்ணின் மகிமை. இடங்கலை பிங்கலை சுழிமுனை என சொல்லப்படுவது எது? என்பது குறித்து தொடந்து குரு விளக்குகிறார். அதை அடுத்த வீடியோவில் விளக்கமாக காண்போம்.
இணைந்திருப்போம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
தொடரும்

February 20, 2021

Vasi Yogam in Tamil (Part 4) வாசி யோகம் பகுதி - 4

 

குருவே துணை.
1. பந்தத்திற்கும் மோட்சத்திற்கும் மனமே காரணம்.
பற்றுள்ள நிலையே பந்தம். பற்றற்ற நிலையே மோட்சம். எல்லாம் நானே. இருப்பது நான் ஒருவனே. நானே ஏகனாக, அதாவது ஒருவனாக எங்கும் எல்லாமாக இருக்கிறேன் என்று உணர்கிற போது அங்கே தன்னை தவிர வேறு ஒன்று இல்லை என்று உணர்கிறபோது அங்கே அடைவதற்கு பொருளோ நபரோ இல்லாமல் போகிறது. எதன் மேல் ஆசைப்படுவது? யார் மேல் ஆசைப் படுவது? இருப்பது நான் மட்டுமே. இதுவே மோட்சம். இப்படி இல்லாமல் தன்னை தவிர தன்னை சுற்றிலும் பல மனிதர்களும் பொருள்களும் உள்ளன. அவற்றில் எதிலிருந்து இன்பம் கிடைக்கும் அது மேலும் மேலும் வேண்டும் என்கிறபோது அங்கே அறியாமை உண்டாகிறது. பற்று ஏற்படுகிறது. பந்தம் ஏற்படுகிறது. பந்தம் பற்று இரண்டும் மனதின் இருவேறு நிலைகள்தான். இரண்டுமே மனதில் தோன்றுவதுதான். ஒன்று அறியாமை. மற்றொன்று உண்மையை அறிந்த ஞானம். மோட்சம்.

2. ஜீவன் இருந்தாலும் கூட மனமிருந்தால் மட்டுமே ஒரு உடலால் காணவோ, கேட்கவோ, அறியவோ முடியும். (தூங்கும் குழந்தை)

3. எந்த ஒன்றும் எதிலிருந்து வந்ததோ அந்த இடத்திற்கே, மூலத்திற்கே சென்று அதில் கரைந்து காணமல் போவது இயற்கை நியதி. அது உப்பு தனது மூலமான நீரில் கரைந்து காணாமல் போவது போல. மனம் தனது மூலமான ஜீவனில் கரைந்து காணாமல் போவது போல. (தூக்கத்தின் போது)
சத்தம் எதிலிருந்து உருவாகிறது? எதில் மீண்டும் கலக்கிறது? அமைதியில். தனது மூலத்தில். வெளிச்சம் எதிலிருந்து உருவாகிறது? எதில் மீண்டும் கலக்கிறது? இருளில். தனது மூலத்தில். கடலின் அலைகள் எதிலிருந்து உருவாகின்றன? எதில் மீண்டும் கலந்து காணாமல் போகின்றன? அதே கடலில். தனது மூலத்தில்.  உருவங்கள் எதிலிருந்து உருவாகின்றன? எதில்  மீண்டும் கலக்கின்றன? அரூபத்தில். வெட்ட வெளியில். தனது மூலத்தில்.   இறைவனின் உண்மையான  திருவிளையாடல் எது? இந்த பிரபஞ்சமும், நீங்களும் நானும் தான்.

4. சிந்திக்கும் மனம் இருக்கும் இடம் தலையில். புருவமத்தியில். நெஞ்சுக் குழியில் அல்ல.
சிந்திக்கும் போது கண்களும் கைகளும் எங்கேசெல்கின்றன? மறந்து போனால் எந்த இடத்தை தட்டுகிறோம்? இடுப்பையா? அல்லது நெற்றிப்பொட்டையா? மறந்து போனால் ஆசிரியர் எந்த இடத்தில் குட்டு வைக்கிறார்? மறந்து போனால் நெற்றியை தேய்பதும் தலையைசொரிவதும் ஏன்? தப்பு செய்தால் அதை பின்பு உணரும்போது கூட தலைதலையாக அடித்துக்கொள்வது ஏன்? மனம் இருக்கும் இடம் நெஞ்சுக் குழியில் என்றால் ஏன் சிந்திக்கும் போது எல்லா செயல்களும் மேல் நோக்கி, தலையை நோக்கியே இருக்கின்றன? அதனால்தான் புருவமத்தியில் தீட்சை பெற்றஉடன் உபதேசம் பெற்ற உடன் மனம் 14 அலைச்சுழலுக்கு கீழே வந்து அமைதி அடைகிறது.