November 13, 2023

வாசியோகத்தில் நெற்றிக்கண் திறத்தல்


 

அன்பே சிவம்! அறிவே சிவம்! அமைதியே சிவம்!

 அன்பர்களே! சித்தர்கள் யார்? என்ற கேள்விக்கு சித்தர்களில் பல யுகங்கள் கல்பங்களை கடந்து வாழ்ந்த, மகா சித்தராகிய காகபுசுண்டர் கூறும் பதில்:

“பூட்டுடைத்துக் கண்டவர்கள் மெத்தவுண்டு

புத்தியுள்ளோ ரவர்களே சித்தர் சித்தர்” (33.1-2)

வாசியோகத்தில் இ⁸ந்த பூட்டு உடைத்தல் நெற்றிக்கண் திறத்தல் என்பது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. ஏன் இந்தப் பூட்டை உடைக்க வேண்டும்? இந்தப் பூட்டு எங்கே இருக்கிறது? இந்தப் பூட்டை எதை கொண்டு எப்படி உடைத்து திறக்க வேண்டும்? அதற்கான பயிற்சி என்ன? அவைகளைத்தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

 ஏன் இந்தப் பூட்டை உடைக்க வேண்டும்?

உடம்பிலிருக்கும் வாதம் பித்தம் சிலேத்துமம் மிகைக் குறையே உடலின் நோய்க்கும்> அதன் அழிவு என்று சொல்லக் கூடிய மரணத்திற்கும் காரணமாகிறது.

“வாதபித்த சிலேத்துமத்தைப் போக்குவீரே

போக்குவீ ரென்றுசொல்லிப் போக்கத்ததானே

பொருளதனைச் சொல்லிவைத்தே னிடங்கள் தோறும்”

இந்த காற்று> வெப்பம்> கபம் என்ற மூன்றின் மிகை குறையை போக்கி சமப்படுத்த> உடலை அழியும் நிலையிலிருந்து அழியாத நிலைக்கு மாற்றும் காயசித்தி அடைய பூட்டு உடைத்தல் அவசியமாகிறது. இந்தப் பூட்டை உடைத்தால்தான் நெற்றிவழி மேலேறி உச்சி வாசல் எனப்படும் சிரசின் உச்சியிலுள்ள பத்தாம் வாசலை நாம் திறக்க முடியும் என்பதால் பூட்டு உடைத்தல் என்பது மிகவும் அவசியமாகிறது.

இந்தப் பூட்டு எங்கே இருக்கிறது?

 இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கிறது. இந்தப் பூட்டைத்தான் அறிவியலார் பிட்யூட்டரி கிலாண்ட் என்கிறார்கள். ஆன்மீகவாதிகள் ஆக்கினா சக்கரம் என்கிறார்கள். புராணங்கள் நெற்றிக்கண்> மூன்றாவது கண் என்று குறிப்பிடுகின்றன. இந்தப்பூட்டின் மிகச்சரியான இருப்பிடம் என்பது அண்ணாக்கிற்கு மேல் இரண்டு விரற்கடை அளவில் இருக்கும் ;இடம். இடது காதின் துவாரத்திலிருந்து வலதுகாதின் துவாரத்திற்கு இடையில் ஒரு நீண்ட கோடு போட்டால் அதன் மையமும் புருவமத்தியில் இருந்து பிடரிகண்ணிற்கு ஒரு கோடு போட்டால் அதன் மையமும் இந்தப் பூட்டு இருக்கும் இடம் தான். சாதாரணமாக நாம் மூச்சை வெளியே விடும் போது பிராணன், சீவ சக்தியாகிய வாயு தொண்டைக்குழியைத்தாண்டி அண்ணாக்கிற்கு நேரே மேல்பாகத்தில் இரு துவாரங்கள் வழியாக சென்று இந்தப்பூட்டில் மோதி திறக்க முடியாமல் நாசித்துவாங்கள் வழியாக வெளியேறுகிறது. நாம் மூச்சை உள்ளே இழுத்தாலும் இந்தப் பூட்டை தொட்டுவிட்டுத்தான் உட்புறமாக திரும்பி நாம் முன் சொன்ன பாதைகளின் வழியே பிராணன் நம் உடலுக்குள் செல்கிறது. இவ்வாறாக உள்ளே செல்லும் மூச்சுக்காற்று முட்டி திரும்பும் இடமும் வெளியே செல்லும் மூச்சுக்காற்று முட்டித்திரும்பும் இடமும் இந்தப் பூட்டு இருக்கும் மிகத்துல்லியமான இடமாகும்.

இந்தப் பூட்டை எப்படித் திறக்க வேண்டும்? அதற்கான பயிற்சி என்ன?

“நாக்குமே லண்ணாக்கு உண்ணாக்குள்ளே

நடுத்தமரைத் தான்திறந்தா லுச்சிவாசல்

மூக்குமேற் தண்டினிலே முனை மூக்குக்குள்

முளைத்தெழுந்த வாசிவரப் பார்த்தபேர்கள்

தாக்குவார் புருவநடு மேலே பார்ப்பார்

தமர்வாச லடைத்திருக்கும் பூட்டுத்தானே.” (32.3-8)

அதாவது நாம் வாயைத்திறந்தால் நமது நாக்கிற்கு மேலாக உட்புறமாக ஒரு சிறு நாக்கு தொங்கிக் கொண்டிருக்கும். அந்த உள் நாக்குக்கு உள்ளே அதாவது உள்நாக்குக்கு நேராக மேல் பாகத்தில் இருக்கும் இரு துவாரங்களை கடந்து சென்றால் இருக்கும் இந்த நடுத்தாமரை பூட்டு திறந்தால்தான் சிரசின் உச்சி வாசல் எனப்படும் பத்தாம் வாசல் திறக்க முடியும் என்று காகப்புசுண்டர் கூறுகின்றார். முடியும் வார்த்தைதயிலிருந்த தொடங்கி இந்தப் பாடலின் வார்த்தைகளை படித்துப்பாருங்கள். மூக்குமேல் தண்டினிலே முனை மூக்குக்கு உட்புறமாக அதாவது புருவமத்திக்கு உட்புறமாக> முளைத்தெழுந்த வாசிவரப் பார்த்தபேர்கள் தாக்குவார்கள்> தாக்குவார்கள் புருவநடு> புருவநடு மேலே பார்ப்பார்> புருவநடு மேலே பார்ப்பார்கள் தமது வாசல் அடைத்திருக்கும் பூட்டுதானே. அண்ணாக்கிற்கு மேலே உட்சுவாசம் ஏற்பட்டு குண்டலினி சக்தி எழும்ப பார்த்த பேர்கள் சிவனாக இருந்து சீவனாக விரிந்த தமது வாசல் அடைத்திருக்கும் பூட்டினை பார்ப்பார்கள்.

 கதவு திறத்தல் என்றாலே அண்ணாக்குக்கு மேல் கதவு ஒன்று அடைத்து பூட்டு போடப்பட்டுள்ளது அதை திறக்க வேண்டும் என்று பொருள் ஆகிறது.

அந்தக் கதவு எப்போது அடைக்கப்பட்டது. தாயின் கருப்பையில் இருந்தபோது அது திறந்துதான் இருந்தது. வெளியே வந்து உலகவாழ்வில் பிராணன் ஈடுபட்டு வெளியே சென்று வீணாக வீணாக சிறிது சிறிதாக பயன்படுத்தாத அந்தக் கதவு அடைத்துப்போனது.

அந்த பூட்டைத் திறக்க வேண்டியது யார்? இடகலை பிங்கலை ஓடாது சுசும்னா நாடியில் ஒடும் பிராணனனும், வெளியே ஆசைகளாக காமத்தீயாக விரியாது உள்ளடங்கி இருக்கும் மனதும்> முளைத்து எழுந்து ஆதாரமையங்களை கடந்து புருவமத்தி சேரும் குண்டலினி சக்தியும் ஒன்றுசேர்ந்துதான் அந்தக் கதவை திறக்க வேண்டும். தொண்டைக்குழியிலிருந்து உறிஞ்சி மூச்சை இழுத்து ஊதுதல் முறையில் அந்தக் கதவை தட்டி முட்டி திறக்க வேண்டும். அதற்கு அகங்காரமாக உள்ள நான் மனதில் அடங்க வேண்டும். மனமாக உள்ள வாயுவாகிய நான் பின் ஜீவனில் அடங்க வேண்டும். ஜீவனாக உள்ள நான் சிவத்தில் அடங்க வேண்டும். சிவன் - ஜீவன் - மனம் - அகங்காரம் (நான்) (சித்தவேதம். அத்.22)

எண்சாண் உடம்பில் சிரசே சேj;திரம்> ஆலயம். அதற்குள் நுழைந்து சிவத்தை தரிசிப்பதற்கு ஒன்பது வாசல்கள் என்பதை குறிப்பாக உணர்த்தவே கோயிலில் ஒன்பது வாசல்களை வைத்தார்கள் சிவனை சென்றடைய: கோயிலின் வெளிப்புறத்தில் இருக்கும் நான்கு வாசல்கள் கடந்து உள்ளே நாலம்பலத்திற்கு செல்லுதல் என்றால் என்ன? காதுகள் இரண்டும்> கண்கள் இரண்டும் கோயிலின் வெளிப்புற வாசல்கள். பிராணன் மனமாக அறிவாக கண்கள் வழியே காதுகள் வழியே வெளியே செல்லாமல் உள்புறமாக செல்லும் போது முதலில் இந்த நான்கு வாசல்களை கடக்கிறது. தியானத்தில் கண்களை மூடி இருக்கும் போது காதுகள் வெளிப்புற சத்தங்களை கேட்காத போது அல்லது சத்தம் இல்லாத அமைதியான இடத்தில் தியானம் செய்யும் போது இது சாத்தியமாகிறது. அடுத்து நமஸ்கார மண்டபத்திற்குள் செல்ல இருக்கும் மூன்று வாசல்களை எப்போது கடக்கிறோம்? வெளியே பேச்சு கத்துதல் என்று சப்தமாக விரியாமல் தியானத்தில் வாயை மூடி இருக்கும்போது பிராணன் உட்புறமாக திரும்பும்போது நமஸ்கார மண்டபத்திற்குள் செல்வதற்காக உள்ள மூன்று வாசல்களில் ஒன்றாகிய இந்த வாய் என்ற வாசலை கடக்கிறோம். மூக்கின் வழியாக உள்ளும் வெளியும் செல்லும் சுவாசம் உட்சுவாசமாக மாறும்போது நமஸ்கார மண்டபத்திற்குள் செல்ல உள்ள நாசித்துவாரங்கள் என்ற மற்ற இரண்டு வாசல்களை கடக்கிறோம். இப்படித்தான் நாம் வாசியோகம் செய்யும் போது இந்த மூன்று வாசல்களை நாம் கடக்கிறோம். சிரசு என்னும் கோயிலில் உள்ள நமஸ்கார மண்டபத்திற்குள் நுழைகிறோம். நமஸ்கார மண்டபத்திலிருந்து மூலஸ்தானத்திற்கு சென்று இறைவனை தொடுவது தரிசிப்பது எப்போது நடக்கிறது? நடைமுறையில் வெளிஉலகில் பூசை செய்யும் ஐயருக்கு மட்டுமே இது சாத்தியமாகிறது. பக்தர்கள் இந்த இருவாசல்கள் வழியாக செல்ல அனுமதி மறுக்கப்படுகிறார்கள். ஆனால் வாசியோகத்தில் நமது சுவாசம் அண்ணாக்கிற்;கு மேலே இருக்கின்ற இருதுவாரங்கள் வழியாக சென்று அங்கு பூட்டி இருக்கும் பூட்டைஉடைத்து பின் நெற்றி வழியாக உச்சிவாசலை அடைந்து அதையும் முட்டி திறந்து சீவன் உள்ளிருக்கும் சிவனை தரிசிப்பது சாத்தியமாகிறது. அண்ணாக்கிற்கு மேலே இருக்கின்ற சிவலிங்கத்தை தரிசிப்பது பிராணன் உள் சுவாசத்தில் உயர்நிலையாக தன்னில் மேலும் அடங்கும்போது ஒரு புள்ளியாக புருவமையத்தில் ஒடுங்கும் போது நடக்கிறது. வெளியில் இருக்கும் கோயிலுக்கு சென்று சிவனை தரிசிப்பது என்பது நமது சிரசாய் இருக்கும் கோயிலுக்குள் சென்று வாசியோகத்தில் சிவனை தரிசிப்பதற்கு ஒரு வழிகாட்டுதலாக அடையாளம் காட்டுவதாக சொல்லப்பட்டது. ஆகவே வாசியோகம் செய்தலே உண்மையான சிவவழிபாடு.

இந்தப் பூட்டு எப்போது திறக்கும் என்பதையும் பின்வருமாறு காகபுசுண்டர் கூறுகிறார்:

“காட்டம் விறகெய்தாமற் தீயிடாமல்

கதிர்மதிக்கு மத்தியது புருவமத்தி

நாட்டமிடக் கோபுரத்தின் வாசற்பூட்டு

நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளே.”( 33.5-8)

ஆசைத்தீ> கோபத்தீ> காமத்தீ என்று சீவசக்தியாகிய வாயுவை வெளியே மனமாக ஓடவிடாமல்> சூரிய கலைக்கும் சந்திரக்கலைக்கும் மத்தியது புருவமத்தி எனப்படும் சுழுமுனை அதை நாட்டமிட தொடர்ந்து கவனிக்க வாசல் பூட்டு நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளும் என்பது காகபுசுண்டர் வாக்கு.

இதற்கான பயிற்சி:

தொண்டைக்குழியில் இருந்து மூச்சை உட்புறமாக உறிஞ்சி இழுத்து புருவமத்தியில் ஐந்து முறையும் பின் அண்ணாக்கிற்கு மேல் இரண்டு விரற்கடை உயரத்தில் உட்புறமாக ஆழமாக சென்று ஐந்து முறையும் ஊதுதல் வேண்டும். அவ்வாறு ஊதிய பின் புருவமத்தியை பத்து மூச்சுகால அளவு கவனித்துவிட்டு அசையாது சித்திரம் போல அமர்ந்து மூச்சின் ஓட்டத்தை சில நிமிடங்கள் கவனிக்க அது மெதுவாக ஓட்ட வேகம் குறைந்து அண்ணாக்கிற்கு மேல் மையத்தில் அமைதி கொள்ளும். அங்கு வாசியின் ஓட்டத்தை இதமான பூ போன்ற அசைவை தொடர்ந்து கவனிக்க கவனிக்க> அப்போது ஏற்படும் மனமற்ற மூச்சற்ற நிலையிலேயே லயிக்க லயிக்க குண்டலினி சக்தி மேலெழும்பி ஒவ்வொரு ஆதார மையங்களாக கடந்து புருவமத்தி வந்துசேரும். ஒவ்வொரு ஆதார மையத்தையும் கடக்கும்போது ஏற்படும் துன்பங்களை ஆன்ம தூய்மை> உடல் தூய்மை> வினைத்தூய்மையாக பொறுத்துக் கொண்டு அதையும் கடந்து செல்ல வேண்டும். புருவமத்தியில் குண்டலினி அடைந்தஉடன் பூட்டுதானாய் திறக்கும். இதற்கு “ராக்காலம் கதவடைத்து கண்மணியே பார்ப்பவர்கள் தேறுவார்கள்” என்று காகபுசுண்டர் கூறுகிறார்.

இதை அனைவரும் சித்தர்வழி செய்து பயன்பெறுவோம்.

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!


October 02, 2023

சிவன் பார்வதிக்கு அருளிய வாசி யோகம்




 

This video explains four breathing techniques in the ancient book Vygnan Bhairav Tantra.


Other videos:


வாசி யோகமும் ஐந்து வகை அமைதியு


ம் - Vasi Yogam and Five Kinds of Silence


வாசி யோகமும் சுழுமுனை நாடியும் / Vasi Yogam and Sushumna Nadi





Vasi Yogam Practice in Tamil - 7/ வாசி யோகம் பயிற்சி - 7

https://youtu.be/2WxUvQcCtKs?si=MhMLL4mxoLURgYny


Vasi Yogam Practice in Tamil - 6/ வாசி யோகம் பயிற்சி - 6

https://youtu.be/DdPXOPSWJn0


Vasi Yogam Practice in Tamil - 5/ வாசி யோகம் பயிற்சி - 5

https://youtu.be/0vuSPYpcLdQ


Vasi Yogam Practice in Tamil - 4/ வாசி யோகம் பயிற்சி - 4

https://youtu.be/zVWzoh8qXzs


மோட்ச சூத்திரம் - 3/ Vasi Yogam Practice Moksha Sutra - 3

https://youtu.be/NkcFQVw9SW0


மோட்ச சூத்திரம் - 2 / Vasi Yogam Practice Moksha Sutra - 2

https://youtu.be/s7EmhdzC7HU


வாசி யோகம் செய்முறை பயிற்சி மோட்ச சூத்திரம் - 1 / Vasi Yogam Practice Moksha Sutra - 1

https://youtu.be/ZqVRxd9PuhE

அறிவின் ஐந்தாவது சக்தி (பாகம் 1) - Fifth Power of Consciousness (part 1)

https://youtu.be/iANZIgsbqkI


அறிவின் நான்காவது சக்தியும் கூடு விட்டு கூடு பாயும் கலையும் (The Fourth power of Consciousness)

https://youtu.be/g5u5h2xeRDg


அறிவின் மூன்றாவது சக்தி -The Third Power of Consciousness (Part 3)

https://youtu.be/VACAktxda0Y


அறிவின் இரண்டாவது சக்தி (The Second Power of Consciousness) - Part 2

https://youtu.be/lSq7fncDGas


வாசி யோகம் தமிழில் பகுதி - 14. 1 Vasi Yogam in Tamil (Part 14. 1)

https://youtu.be/dx-wbRRvgvI


வாசி யோகம் தமிழில் பகுதி - 13 Vasi Yogam in Tamil (Part 13)

https://youtu.be/Gz5cFdzdWvI


தாயம் விளையாட்டில் மறைந்துள்ள ரகசியங்கள் - the secrets of dhayam game

https://youtu.be/5tk5S07x22k


வாசி யோகம் தமிழில் பகுதி - 12 Vasi Yogam in Tamil (Part 12)

https://youtu.be/RIRMWxLkHdc


வாசி யோகம் தமிழில் பகுதி - 11 Vasi Yogam in Tamil (Part 11)

https://youtu.be/-g9l2feRtOQ


வாசி யோகம் தமிழில் பகுதி - 10 Vasi Yogam in Tamil (Part 10)

https://youtu.be/AuNv3yCCliQ


வாசி யோகம் தமிழில் பகுதி - 9 Vasi Yogam in Tamil (Part 9)

https://youtu.be/pjRgdvaY5NM


வாசி யோகம் தமிழில் பகுதி - 8 Vasi Yogam in Tamil (Part 8)

https://youtu.be/F2HrdV4VErA


வாசி யோகம் தமிழில் பகுதி - 7 Vasi Yogam in Tamil (Part 7)

https://youtu.be/DRA0OJyCB-A


வாசி யோகம் தமிழில் பகுதி - 6 Vasi Yogam in Tamil (Part 6)

https://youtu.be/SpUTkeiKUx4


வாசி யோகம் தமிழில் பகுதி - 5 Vasi Yogam in Tamil (Part 5)

https://youtu.be/JnhTvLckcuk


வாசி யோகம் தமிழில் பகுதி - 4 Vasi Yogam in Tamil (Part 4)

https://youtu.be/t-PkTpgRGa8


Vasi Yogam in Tamil (Part 3) வாசி யோகம் தமிழில் பகுதி - 3

https://youtu.be/akgyCyV_00g


Vasi Yogam in Tamil Part 2 வாசி யோகம் தமிழில் பகுதி 2

https://youtu.be/ui3s_hMHinQ


Vasi Yogam in Tamil Part 1 வாசி யோகம் தமிழில் பகுதி 1

https://youtu.be/RlbZxnMB8ig


மனதின் நான்கு உணர்வுகள் -கதை (The Four Kinds of Experiences of the Mind)

https://youtu.be/mLnwHgpeR3s


Meditation 6 : Journey Beyond Your Birth

https://youtu.be/2Q512Onowrw


Meditation 5 : Journey to the Centre of Yourself

https://youtu.be/uaQ3LNAFKMU


Meditation 4 : The Demise of the Giant P F

https://youtu.be/uaQ3LNAFKMU


Meditation 3: The Divine Flowering

https://youtu.be/Ak0frGACJQw


Meditation - 2 : Nine Center Meditation

https://youtu.be/q8ics0PdrPA


Meditation 1 The Infinite Self

https://youtu.be/LGkh4ZG7r-U


உயிரை பற்றிய ரகசியங்கள் - பகுதி 1

https://youtu.be/gpX2ENt-Bho


கடவுளைத் தேடி அறிவின் பயணம்

https://youtu.be/g6Pb6E8ThS4

November 19, 2021

வாசி யோகம் - பகுதி-10 / vasi yogam part 10

 

vasi yogam sidha vedam part 10

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு பு~;பம் சாத்தியே

சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

- சிவ வாக்கியர்

கடவுள் விளக்கத்தில் சிவானந்த பரமஹம்சரும், சிவ வாக்கியரும், திருமூலரும் ஒத்த கருத்தையே கூறியுள்ளனர். நாத்திகர்கள் - கற்சிலையில் கடவுள் இல்லை. ஆத்திகர்கள் - வழிபடும் கற்சிலையில் கடவுள் உள்ளார். ஞானியர்கள் - நமக்கு உள்ளும் புறமுமாக, பிரபஞ்சத்தின் உள்ளும் புறமுமாக எங்கும் இருக்கும் கடவுள் இந்த கற்சிலையிலும் உள்ளார். இதில் மட்டும்தான் உள்ளார் என்பதும் தவறு. இதில் இல்லை என்பதும் தவறு. 

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்

தௌ;ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே.

- திருமூலர்



வாசி யோகம் - பகுதி 9

 

vasi yogam sidha vedam part 9

அண்டத்தில் உள்ளது. பிண்டத்தில் உள்ளது. மனிதன் ஒரு நடமாடும் பிரபஞ்சம். சிரசே ஆகாயம். மூலாதாரமே பூமி. வாதம் பித்தம் கபமே மற்ற மூன்று பூதங்களாகிய காற்று, வெப்பம், நீர். இவை மூன்றும் ஒன்றிற்குள் ஒன்றாக இருக்கின்றன. ஒன்றிலிருந்து ஒன்றாக உற்பத்தியாகின்றன.  புருவமத்தியில் இருந்து தலைஉச்சியாகிய பிரம்மரந்திரம் வரை உள்ள பகுதி, சிரசே ஆகாயம். அந்த ஆகாயத்தில் புருவமத்தியில் இருக்கும் ஜீவசக்தியாகிய வாயுதான் சூரியன். தீட்சை உபதேசம் என்ற முறையில் அந்த நெற்றிக்கண் திறத்தலே சூரிய உதயம். அது உடலிலும் வாழ்விலும் ஆன்மாவிலும் பிரகாசத்தை உண்டாக்குகிறது. உச்சியில் பிரம்மரந்திரத்தில் அதே சூரியன் சஞ்சரிக்கும் ;போது அங்கு ஜீவசக்தியாகிய வாயுவை கவனிக்கும் போது அதுவே நண்பகல். உடலில் வாழ்வில் ஞனாத்தில் அமைதியின் பிரகாசத்தின் உச்சம். உபதேசம் பெறாதவர்கள், நெற்றிக்கண் திறக்கப்படாதவர்கள் இன்னும் அவர்கள் ஆன்மீக வாழ்வில் இன்னும் சூரிய உதயம் காணாதவர்கள். இருளில் மாயையில் மயக்கத்தில் புலன் மயக்கத்தில் வாழ்பவர்கள். 

ஆக்கினை முதல் துரியம் வரை உள்ள இந்த ஆகாயத்தில் ஜீவன் இருக்கிறது. அந்த ஜீவனின் சலனமே ஜீவசக்தியாகிய வாயு. கடல் வேறு அலை வேறா? இல்லை. கடலின் அசைவே அலை. ஜீவன் வேறு ஜீவசக்தியாகிய வாயு வேறா? இல்லை. ஜீவனின் அசைவே ஜீவசக்தியாகிய வாயு. ஜீவன் ஜீவனாக உள்ளடங்கி அமைதியாக இருந்தால் அதுவே சிவன். சிவனே என்று இருக்கும் நிலை. அதே ஜீவன் ஜீவசக்தியாக மனமாக எண்ணங்களாக வெளியே வியாபித்தால் அதுவே சக்தி நிலை.

இந்த புருவமத்தியில் தான் 3 கோடியே 50 லட்சம் நாடிகளும் வந்து ஒன்று சேர்கின்றன. அந்த நாடிகளின் வீரியமே சுக்கிலம். சுக்கிலம்; இருக்குமிடம் அக்னி நேத்திரம், அதாவது நெருப்புக்கண், நெற்றிக்கண் என்று சொல்லப்படுகின்ற புருவமத்தி. அதனால்தான் உடலுறவில் அல்லது சுயஇன்பத்தில் சுக்கிலமாகிய விந்து  வெளியேறும் போது உடலின் அத்தனை நாடி நரம்புகளில் மின்சாரம் பாய்ந்தது போன்று உச்ச கட்ட இன்பத்தை ஜவன் உணர்கிறது. நாடிகளின் வீரியமே சுக்கிலம். அந்த நாடிகள் தளர்ந்தால் உடலிலே முதுமை. விந்து உற்பத்தியும் உடலில் குறைகிறது. அதிகமான மின்சாரம் வீட்டில் பயன்படுத்தும் வயர்களில் அடிக்கடி பாய்ந்தால் அது கருகி எரிந்து விடும். அதுபோல் அடிக்கடி தாம்பத்தியம் சுயஇன்பத்தில்; ஈடுபட்டால் அடிக்கடி மிகை மின்சாரம் பாய்ந்து நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்துவிடும். உடலில் சுக்கிலம் குறையும் சுருக்கம் ஏற்படும். தளர்ச்சி ஏற்படும். முதுமை வரும். உடலில் தேஜஸ் பொலிவு பிரகாசம்; ;மறைந்துவிடும். நாடி நரம்புகள் முற்றிலும் தளர்ந்தால் அதுவே மரணம். அந்த தளர்வடையும் நரம்புகளை தளர்வடையாமல் வைத்துக்கொள்வதற்கே காயகல்ப கலையில் நரம்பூக்கம் என்னும் பயிற்சி சொல்லித்தருகிறார்கள். 

ஜீவசக்தியாகிய வாயுவின் உற்பத்தி இடமும் புருவமத்தி. சுக்கிலத்தின் இருப்பிடமும் புருவமத்தி. வாயு சுக்கிலம் இரண்டும்; அக்னியின் சொரூபம். அதனால்தான் அடிக்கடி சம்யோகம் சுயஇன்பம் செய்தால் உடல் சூடு அடைகிறது. அதனால்தான். இவைஇரண்டும் இருக்குமிடமாகிய நெற்றிக்கண்ணை நெருப்புக்கண் என்று கூறுகிறோம். இந்த சுக்கிலம் இளகினால்தான் உடலுறவு சாத்தியம். சிரு~;டி சாத்தியம். அது இளகுவது நடமாடிக்கொண்டிருக்கிற,  கதாகதம் செய்துகொண்டிருக்கிற, சக்திவடிவில் ஸ்த்ரீ வடிவில் இருக்கும் ஜீவசக்தியாக இருக்கின்ற வாயு,  புருவமத்தியில் புரு~ வடிவில் சிவநிலையில் இருக்கும் ஜீவநிலையிலிருக்கும்; வாயுவுடன் சம்யோகம் செய்யும் ;போது. அந்த சுக்கிலத்தை இளக்கி ஜீவன் சக்தியோடு சேர்த்து கீழே கொண்டுவந்து சிரு~;டியை உண்டாக்குகிறது ஜீவசக்தியாகிய வாயு. இங்கு சுக்கிலத்திற்குள் வாயு புகுந்து சிரு~;டி உண்டாகிறது என குரு கூறுவதன்; ;பொருள் என்ன? 

முதலில் சிரு~;டிக்கு காரணமான வாயு எங்கே எப்படி உற்பத்தியாகிறது என்றும் பின் சிரு~;டிக்கு பயன்படுத்தப்படும் சுக்கிலம் எங்கே எப்படி உற்பத்தியாகிறது என்பதையும் பின் அவை இரண்டின் மூலமும் சிரு~;டி எப்படி உண்டாகிறது என்றும் குரு சீடனுக்கு விளக்குகிறார். வாயு எங்கே உற்பத்தியாகிறது? புருவமத்தியில். எப்படி உற்பத்தியாகிறது. புருவமத்தியிலிருந்து உச்சந்தலை வரை உள்ள பகுதியே ஆகாயம் அங்குள்ள ஜீவனின் அசைவே வாயு. அது உற்பத்தியாகும் இடம் புருவமத்தி. சுக்கிலம் எங்கே உற்பத்தியாகிறது. புருவமத்தியில். எப்படி உற்பத்தியாகிறது? ஜீவசக்தியாகிய வாயு எப்படி அக்னியின் சொரூபமாக இருக்கிறதென்றும் அதற்குள் எப்படி அக்னி இருக்கிறதென்றும் அந்த வாயு எப்படி தேகமாக இருக்கிறதென்றும் போன பதிவில் பார்த்தோம். வாயுவாக இருப்பது தேகம். தேகமாக இருப்பது வாயு. அந்த தேகத்திற்குள் அக்னி அதிகரிக்கும் போது அதிலிருந்து ஆவியாக உற்பத்தியான வியர்வைதான் சுக்கிலம். இப்படித்தான் சுக்கிலமும் புருவமத்தியில் அத்தனை நாடிகளும் ஒன்று சேரும் புருவமத்தியில் அதன் வீரியமாக உற்பத்தியாகிறது. இவ்வாறு வாயுவின் அக்னியின் வியர்வையிலிருந்து சுக்கிலம் உற்பத்தியாவதால் அதிலிருந்து சிரு~;டி உண்டாவதால் “பிரமாண்ட கடாகமே (உலகம் முழுவதுமுள்ள உயிர்கள்) சுவேத ஜோத்பவம் (வியர்வையிலிருந்து உற்பத்தியானது) என்று முன்னோர்கள் ;கூறினார்கள். இந்த சுக்கிலத்திற்குள் வாயுபுகுந்து எப்படி சிரு~;டி உண்டாகிறது? சிறுவர்கள் முட்டைவிடும் சோப்புதண்ணீரை அல்லது காட்டாமணக்கின் பாலை ஒரு இலையில் எடுத்து ஈர்க்கில் குச்சியை சிறிது வளைத்து ஊது குழல் போல செய்து ஒரு ஊதும் அந்த பாலை தொட்டு ஊதும் போது அங்கே கணக்கில்லாமல் முட்டைகள் உற்பத்தியாகின்றன. அந்த ஒவ்வொரு முட்டையிலும் உறை போல சோப்புநீர் அல்லது காட்டாமணக்கு பால் இருந்தாலும் முட்டைகளுக்கு உள்ளே இருப்பது என்ன? வாயுவாகிய காற்றுதான். இதுதான் சம்யோகம் எனும் புணர்ச்சியின் போதும் நடக்கிறது. சுக்கிலம் காட்டாமணக்கு பால் இரண்டுமே பசைத்தன்மை உள்ளது. மூச்சை அடக்கி அடக்கி சீராக ஊதிதான் சம்யோகமே நடக்கிறது. அவ்வாறு மூச்சுவிட்டு சம்யோகம் நடைபெறும் ;போது பசைத்தன்மை உள்ள சுக்கிலத்திற்குள் வாயுவை செலுத்தும் போது மூத்திரப்பை நுனிவரை முட்டைகள் நீண்டு பின் அதிலிருந்து விடுபட்டு சிறு சிறு முட்டைகளாக ஸ்தீரியின் கற்ப பைக்குள் விழுந்து சிரு~;டி சம்பவிக்கிறது. இப்படி எத்தனை முட்டைகள் கற்பபைக்குள் விழுகிறதோ அத்தனை குழந்தைகள் உண்டாகின்றன. ஒரே பிரசவத்தில் இப்படித்தான் இரண்டு மூன்று குழந்தைகள் கூட உற்பத்தியாகின்றன. வித்தில் வீரியம் இல்லையென்றால் போதுமான பசைத்தன்மை இல்லையென்றால் ஊதுதல் முறையாக இல்லையென்றால் அங்கே ஒரு முட்டைகூட தோன்றுவதில்லை. குழந்தையும் ஜனிப்பதில்லை. அது சில சிறுவர்கள் சோப்புநீரில் முட்டைவிடும்போது ஒரு முட்டைகூட உருவாகாமல் வெடித்து வெடித்து ஏமாற்றம் அடைவது போல. 

சீடனானவன் சுவேதஜம், அண்டஜம், உத்பீஜம், ஜராயுஜம் என்ற நான்கு வகை சிரு~;டிகளை விளக்குமாறு கேட்கிறான். இதை பற்றி உனக்கு ஏற்கனவே என்ன தெரியுமென்று குரு கேட்கிறார். அதற்கு சீடன் சுவேதஜம் என்றால் வியர்வையிலிருந்து மூட்டைப்பூச்சி பேன் முதலியவையும், அண்டஜம் என்றால் முட்டையிலிருந்து பறவை, பாம்பு, மீன் முதலியவையும், உத்பீஜம் என்றால் பூமியிலிருந்து முளைத்து ; புல், பூண்டு தாவரங்கள் முதலியவையும், ஜராயுஜம் என்றால் பிரசவத்தின் மூலம் மனிதன் பசு முதலியவையும் பிறக்கின்றன என அறிந்துள்ளதாக கூறுகிறான். இந்த நான்கு வகைபிறப்புகளும் வேறு வேறு வகையிலான பிறப்புகள் என்று கருதுவதுதான் தவறு என்று குரு விளக்குகிறார். 

எல்லாருக்கும் வாயு இருக்கிறது. அதுதான் தேகம். அந்த வாயுவாகிய தேகம் உ~;ணம் அடையும்போது அதிலிருந்து தோன்றும் வியர்வையே சுக்கிலம். சுவேதம். அதுவே சிரு~;டிக்கு ஆதாராம் என்பதால் தேகத்தின் வியர்வையிலிருந்து சிரு~;டி என்று கூறினார்கள். அது பருஉடலின் வியர்வை என மக்கள் புரிந்துகொண்டதுதான் தவறு. தேகம் என்று பருஉடலை எண்ணிவருவதுதான் அத்தனை தவறான புரிதலுக்கும் காரணம்.

சுக்கிலத்தில் வாயு புகும் போது முட்டை உருவாகிறது. அந்த முட்டையிலிருந்து சிரு~;டி உண்டாவதால் அண்டஜம் என்று கூறினார்கள். குறிப்பிட்ட அளவிற்கு மேல் வளர்ந்தஉடன் முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே உயிர் வருகிறது. அதுதான் முளைப்பு. அது விதையிலிருந்து தாவரம் வெளிவருவதை போல. அதுவே உத்பீஜம் என்று சொல்லப்பட்டது.  அவ்வாறு வெளிவந்தாலும் சிறிது காலம் சில மணிநேரம் பூமி என்னும் கர்ப்ப பைக்குள் இருக்கும் தாவரங்கள் பின்புதான் மண்ணைவிட்டு வெளியே தலையை காண்பிக்கும். இதேதான் பெண்ணிடத்தில் நடக்கும் போது அதை பிரசவித்து பிறத்தல் என்று கூறுகிறோம். இதற்கே ஜராயுஜம் என்று பெயர். இவை நான்கும் நான்கு வகை பிறப்புக்கள் அல்ல. ஒரே பிறப்பின் நான்கு நிலைகள். 

எல்லா உயிர்களுக்குள்ளும் வாயு இருக்கிறது. அதற்குள் அக்னி இருக்கிறது. அதிலிருந்து வியர்வை உண்டாகிறது. அந்த வியர்வையாகிய சுக்கிலத்திலிற்குள் வாயு புகும்போது முட்டை உருவாகிறது. அந்த முட்டைகள் கற்ப பையில் விழுந்தோ அல்லது கோழி பாம்பு முதலிய உயரினங்களில் உடலுக்கு வெளியே தாயின் சூட்டிலோ முளைப்பு என்பது நிகழ்கிறது. வளர்ந்த உயிர் முட்டையிலிருந்தோ தாயின் உடலுக்கு வெளியிலோ வரும்போது அதை பிரசவித்தல் என்று கூறுகிறோம்.

பரு உடலின் வியர்வையிலிருந்து பேன் முட்டை பூச்சி என்றால் எல்லார் உடலிலும் வியர்வை இருக்கிறது. ஏன் பேன் முட்டைபூச்சி எல்லார் உடலிலும் ;இல்லை. 

பொருத்தமான உதாரணங்கள்: பன்னீர் செம்பிலிருந்து தெளிக்கும்போது பன்னீர் சிறு சிறு முட்டைகளாக சிதறுவதைபோல சுக்கில துளிகள் சிதறி அவை எல்லாவற்றிலும் வாயு நுழைந்து விட்டுப்போகாமல் தென்னம்பூ குலைபோல கர்ப்பபையில் விழுகிறது என உதாரணத்துடன் குரு விளக்குகிறார். 

வாயுவாகிய காற்றிற்கு உருவமில்லை. உருவமில்லாத ஒருவருக்கு பெயர் ஏது? ஈஸ்வரனுக்கும் உருவமில்லை. நாமமும் இல்லை. வாயுவும் உள்ளும் புறமுமாக எங்கும் இருக்கிறது. ஈஸ்வரனும் எங்கும்; இருக்கிறார். நமக்கு முன்னே இருக்கும் காற்றிற்கு அடி எது முடி எது என்று காண இயலுமா? முடியாது. பிரபஞ்சத்திற்கு உள்ளும் அப்பாலும் எங்கும் நிறைந்த ஏகப்பெருவெளியாக வெட்டவெளியாக எல்லையே இல்லாமல் உள்ள ஈஸ்வருக்கும் அடி முடிகாண இயலாது. வாயுதான் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்கிறது. இதைத்தான் ஈஸ்வரன் படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களை செய்கிறார் என்று கூறுகிறோம். 

உள்ளும் வெளியும் தான் என்ற நிலையலிருந்து உண்டானது. ஜீவசக்தியாகிய வாயு உள்ளும் வெளியுமாக வியாபிக்கும் போது மனம் உண்டாகி தான் என்ற எண்ணம் உண்டாகி தனக்குள் தனக்கு வெளியே என்றெல்லாம் ;உண்டாயிற்று. ஆனால் அது மனமாக இருக்கும் போது தோன்றுவது. ஆனால் அதே ஜீவசக்தி சிவநிலையில் இருக்கும்போது வெட்டவெளியாக மனமின்றி இருக்கும்போது. அங்கு நான் இல்லை. சிவநிலைமட்டுமே இருக்கிறது. அந்த நிலையில் உள்ளும் வெளியும் இ;ல்லை. பரந்து விரிந்த பரவெளிக்குள் நின்று பாருங்கள். அங்கே உள் ஏது வெளி ஏது? 

எது ஈஸ்வர சேவை? சேவித்தல் என்பது குடித்தல் உட்கொள்ளுதல் என்று பொருள் படும். உள்ளிருக்கும் வாயுவை வெளியே அதோகதியாய் விடாமல் உள்ளே நடக்கவிட்டு ஈஸவரனோடு சேருவதே உட்கொள்ளுதல் சேவித்தல் என்று பொருள்படும். அதுவே ஈஸ்வர சேவை. அதுவன்றி குளித்து கோயிலுக்கு சென்று பால் நெய்வேத்தியங்கள் செய்து பூசை செய்வதல்ல ஈஸ்வர சேவை. அதனால் முக்தி கிட்டாது. வெளியே வியாபித்து நசிந்து அழிந்துபோகும் வாயுவை உட்புறமாக பிரமரந்திரத்தில் துரியத்தில் லயமாக செய்வதே ஈஸ்வர சேவை. அதன் உயர்நிலையே முழுமை நிலையே முக்தி. 

For Video/ Audio:



வாசியோகம் (பகுதி-8) அத்தியாயம் -4

 

Sidha Vedam Vasi yogam part - 8

ஜீவ சக்தியாகிய வாயுதான் ஈஸ்வரன். எப்படி? - ஈஸ் ூ வரன் - பரண சிரே~;டன் - காப்பாற்றும் செயலை செய்வதற்கு உரிமை உடையவன் - ஏன் மாப்பிள்ளை பார்த்தல் வரன் பார்த்தல் என்கிறோம்? ஏன் கணவனே கண்கண்ட தெய்வம் என்கிறோம்? நம்மை காப்பாற்றுவது வாயு அப்படியானால் ஜீவ சக்தியாகிய வாயுதான் ஈஸ்வரன்.

படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலை செய்யும் ஈஸ்வரனும்  ஜீவசக்தியாகிய வாயுவும் ஒன்றே! சிரு~;டி, ஸ்திதி, சம்ஹாரம் மூன்றிற்கும் காரணம் வாயுவாகிய ஈஸ்வரனே! உருவமில்லாத வாயுதான் உருவமுள்ள உடல்  அவதரிக்க காரணமாகிறது. சிரு~;டிக்கு காரணம் வாயுவே! புணர்ச்சி இன்றி சந்தானம் ;இல்லை. வாயு ;இல்லா உடலாகிய பிணம் புணர்ச்சி செய்யுமா? சிரு~;டிக்கு புணர்ச்சி தேவை. புணர்ச்சிக்கு வாயு உள்ள உடல் தேவை. ஆக சிரு~;டிக்கு காரணம் வாயுவே! 

உடம்பில் இருக்கும் நாடிகள் 3 கோடியே 50 இலட்சம். அதில் 72000 மிக முக்கியமானவை – இவை காற்று சஞ்சரிப்பதற்கு பொருத்தமான நாடிகள். - இந்த 72000-ல் 1702 மட்டுமே ஸ்தூல நாடிகள் மற்றவை சூட்சம நாடிகள் - இந்த 1702-ல் தச நாடி என்று சொல்லப்படுகிற 10 நாடிகளே மிக முக்கியமானவை. அவற்றிலும் மிக முக்கியமானவை இடகலை, பிங்கலை மற்றும் சுழிமுனை. அதாவது வாத பித்த கபநாடி. அதிலும் முக்கியமானது சுழிமுனை நாடி. சுழிமுனை என்பது புருவமத்தி. மூலாதாரத்தில் தொடங்கி சுழிமுனையில் வந்து அனைத்து நாடிகளும் சங்கமிக்கும். அந்த நாடிகளில் முக்கியமானது சுழிமுனை நாடி.

உடலின் அனைத்து நாடிகளும் ஒன்று சேரும் இடம், சுக்கிலம் உற்பத்தியாகும் இடம்,  புருவமத்தி. உடலில் மேலும் கீழும் கதாகதம் செய்து கொண்டிருக்கும் ஜீவசக்தியாகிய வாயு ஸ்த்ரீ வடிவம். புருவ மத்தியில் இருக்கும் ஜீவசக்தியாகிய வாயு புரு~ வடிவம். புணர்ச்சியின் போது இவை இரண்டும் புருவமத்தியில் சங்கமித்து சுக்கிலம் கீழ் நோக்கி விரைந்து அதில் வாயு புகுந்து சிரு~;டி உண்டாகிறது. – 

கங்கு மட்டுமே இருப்பது சாதாரண மனிதர்களின் உடல். வாயுவைக் கொண்டு ஊதுதல் என்பதை செய்வதால் அக்னி இருப்பது வாசியோகம் செய்பவரின் உடல். நெருப்பை உருவாக்குதல், காத்தல், அழித்தல் அனைத்தும் வாயுவினால்.

நம் உடலை முதுமை வராமல் அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்றால் உண்மையில் உடல் எதுவென்று தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய சரீரம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது உண்மையில் உங்கள் உடல் இல்லை. உள்ளிருக்கும் காற்றுதான் சரீரம். எப்பொழுது இந்த உடலை சரீரமென்றும் பிணமென்றும் அழைக்கிறோம். ஜீவசக்தியாகிய வாயு, அது இருந்தால் சரீரம் என்றும், இல்லையானால் பிணம் என்றும் அழைக்கிறோம். சரீரம் என்ற வார்த்தை உடலை குறிக்கிறதா? அல்லது உடலில் இருக்கும் வாயுவை குறிக்கிறதா? எது இருந்தால் இந்த உடலை சரீரம் என்று அழைக்கிறோமோ அதுவே சரீரம். வாயுவே சரீரம். காற்றே சரீரம். காற்று இல்லாவிட்டால் உடல் அழிந்து போகின்றது  என்று நினைக்கிறோம். ஆனால் காற்றுதான் உடல் என்பதை நாம் உணர்வதில்லை. னுநயன டிழனல ளை றசழபெ – டிழனல ளை ழெ அழசந”ளை வாந சiபாவ நஒpசநளளழைn. பல்ப் என்று எதை சொல்லுவோம் கரளந போனதையா? அல்லது கரளந போகாத பல்பையா? பேஸ்ட் என்று எதை சொல்லுவோம் காலியான டூத் பேஸட்டையா? அல்லது பசை நிரம்பி உள்ளதையா? புத்தகம் என்று சொல்லுவது அட்டையையா? உள்ளே இருக்கும் வெற்று பேப்பரையா? அல்லது அந்த பேப்பரில் பிரிண்ட் ஆகிஇருக்கும் அர்த்தமுள்ள வார்த்தைகளையா? வாழைப்பழம் என்று சொல்லுவது உள்ளிருக்கும் கனியையா? அல்லது அதன் தோலையா? உள்ளிருக்கும் கனி தீர்ந்து விட்டால் இல்லாவிட்டால் அதற்கு பெயர் தோல். உள்ளிருக்கும் கனியாகிய ஜீவ சக்தியாகிய வாயு இருந்தால் சரீரம் என்றும் அது இல்லாவிட்டால் அதற்கு பிணம் என்று பெயர். அப்படியானால் உள்ளிருக்கும் வாயுதான் சரீரம்.

நாம் காணவும், கேட்கவும், உண்ணவும், எண்ணவும் நடமாடவும் உதவுவது சரீரம். உள்ளே ஜீவசக்தியாகிய வாயு இல்லாவிட்டால் இவைகளை செய்ய முடியுமா? பிணத்தால் இவைகளை செய்ய முடியுமா? அந்த பிணத்திற்கு இவையெல்லாம் முடியாது. அப்படியானால்  சரீரம் என்பது எது? இந்த உடலா? அல்லது உள்ளிருக்கும் ஜீவசக்தியாகிய வாயுவா?

சரீரம் என்ற வார்த்தைக்கு திராவகமாதல் என்று பெயர். அதாவது நீருற்று போல ஊறி ஓடிக் கொண்டிருப்பது. சிறிது சிறிதாக  அழிந்து கொண்டிருப்பது. ஒரு சமயத்தில் முற்றிலும் வற்றி இல்லாமல் போவது. நம் உடலில் சிறிது சிறிதாக நசிந்து போய் அழிவது எது இந்த பருஉடலா? அல்லது வாயு உடலா? வாயு உடல் அதுவே சரீரம். உண்மையில் நசிந்து போகின்றது என்று நாம் நினைக்கின்ற இந்த பருஉடல் நசிவதில்லை. வைரம் பதித்த மரத்துண்டு மண்ணில் புதைத்தால் என்ன ஆகும். மரத்துண்டு கரையானுக்கு புழு பூச்சிகளுக்கு இரையாகி வைரம் மிஞ்சும். அந்த வைரம் தான் நமது எலும்புகள் மண்டையோடு, மரத்துண்டுதான் தோலும் சதையும்- பலநாள் கழித்து தோண்டி பார்த்தாலும் மண்டையோடு எலும்புகள் நசிவதில்லை. மேலும் இறந்து போன மம்மி மியுசியத்தில் இருக்கும் பதப்படுத்தப்படும் உடல், இறந்து போன மீன்களின் பதப்படுத்தப்பட்ட உடல் என்றும் நசிந்து போவதில்லை. உண்மையில் நசிந்து போவது உடலில் இருக்கும் ஜீவசக்தியாகிய வாயுதான். காற்றுதான். அது உடலில் நீருற்று போல ஊறி தொடர்ந்து வெளியே வியாபித்து மனமாக மாறி பஞ்சேந்திரியங்கள் வழியாக வெளியே சென்று நசிந்து நசிந்து ஒருகட்டத்தில் அந்த நீரூற்று எப்படி வற்றி இல்லாமல் போகிறதோ அதேபோல் இல்லாமல் போகிறது. அப்படி நசிந்து இல்லாமல் போவது வாயுதான். அதுவே சரீரம்.

எரியும் வாயு அக்னி சொருபம். சப்த சொரூபம். விளக்கு எரிகிறது என்று கூறுகிறோம். உண்மையில் எரிவது விளக்கா? அதிலிருக்கும் எண்ணையா? திரியா? இது எதுவுமில்லை. காற்றுதான் எரிகிறது. நெருப்பு உண்மையில் எதற்குள் இருக்கிறது? விளக்கிலா? திரியிலா? எண்ணெயிலா? தீக்குச்சியிலா? அல்லது உரச உதவும் தீப்பெட்டியிலா? இவை எதிலும் இல்லை. காற்றில். காற்றின்றி விளக்கு எரிவதில்லை. காற்று அதிகமாக இருந்தாலும் விளக்கு எரிவதில்லை. ஒரு விளக்கை பொருத்தி காற்று போகமுடியாத கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விடுங்கள். அந்த விளக்கு, அந்த பெட்டிக்குள் இருக்கும் காற்று தீர்ந்து எரிந்து போகும் வரைதான் எரியும். பெட்டிக்குள் காற்று தீர்ந்த உடன் விளக்கும் அணைந்துவிடும். எரிவது விளக்கா? காற்றா? காற்றுதான். இந்த உடலும் அப்படி ஒரு விளக்குதான். உள்ளே காற்று தீர்ந்துபோகும்போது எரிவதற்கு ஒன்றும் இன்றி பிணம் என்று ஆகிறது. முதுமை அடைவது அழிந்து போவது இந்த உடல்தான் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் தீர்ந்து போவது அழிந்து போவது உள்ளிருக்கும் காற்றுதான். இதேபோல்தான் விறகுதான் எரிகிறது என்று நினைக்கிறோம். உண்மையில் எரிவது விறகா? காற்றா? காற்று இல்லாவிட்டால் அங்கே ஏதாகிலும் எரிய முடியுமா? எரிவது காற்றுதான்.  எரியும் வாயு அக்னி சொருபம். 

அக்னி சொரூபமும் வாயுதான். சப்த சொரூபமும் வாயுதான். வாயு  இல்லாவிட்டால் சப்தம் உண்டாக முடியுமா? ஜீவசக்தியாகிய வாயுதான் சப்தமாக நசிந்து செலவாகின்றது. வாயு இல்லையெனில் சப்தமில்லை. சப்தமில்லை எனில் மொழி இல்லை. ஆகவே மொழியும் ஜீவசக்தியாகிய வாயுதான். கத்தாதே கத்தாதே என்று ஏன் கூறுகிறார்கள்? அங்கே செலவாவது ஜீவசக்தியாகிய வாயுதான். அது மரணத்திற்கு ஒப்பாகும். எனவேதான் கத்தாதே கத்தாதே என்கிறார்கள். மலையாளத்தில் காளுக என்றால் அழுதல் என்று பொருள். அங்கேயும் இதுதான் நடக்கிறது. ஆக காற்று சப்த சொரூபம்.

ஓம்சாந்தி! சாந்தி! சாந்தி!

For Audio / Video: